முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய அணியின் பலவீனமே எங்களது பலம் - யுவராஜ் சிங்

புதன்கிழமை, 23 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 23 - உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் பலவீனமே எங்களது பலமாக இருக்கும் என்று இந்திய அணியின் அதிரடி வீரரான யுவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்தார். 

உலகக் கோப்பை காலிறுதியில் இன்று நடக்க இருக்கும் 2 -வது ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இதி ல் ஆஸ்திரேலியாவினன் பலவீனமே எங்கள் பலம் என்று கூறுகிறார் இந்திய வீரர் யுவராஜ் சிங். 

குஜராஜ் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறப் போகும் இப்போட்டி குறித்து இந்திய அணியின் முன்னணி வீரரான யுவராஜ் சிங் கூறியுள்ளதாவது - 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இத்தொடரில் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. அதனால் அணியின் பலம் என்று பார் த்தால் இரு அணிகளுமே சமநிலை கொண்டவை. ஆனால் போட்டி தினத்தன்று எந்த அணி சிறப்பாக ஆடுகிறதோ அதுவே வெற்றி பெறு

ம். 

ஏற்கனவே உலகக் கோப்பையில் ஹாட்ரிக் அடித்த அணி ஆஸ்திரேலி ா. அந்த அணியின் நடுநிலை பேட்டிங் வரிசை பலவீனமாக உள்ளது. ஷேன் வார்ன், மெக்ராத், கில்கிறிஸ்ட், போன்ற தாக்கம் ஏற்படுத்தக் கூடிய வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் இல்லை. 

ஆஸ்திரேலிய அணியின் இந்த பலவீனங்களை எங்களது பலமாக்கி வெற்றி காண்போம். அவர்களது பலவீனத்தை சாதகமாக்கினால் இந்தி ா வெற்றி பெறுவது உறுதி. 

பேட்டிங் வரிசையில் 4 -ம் நிலை வீரராக களம் இறங்குவதே எனக்கு சாதகமாக உள்ளது. 5 -ம் நிலையில் அந்த அளவுக்கு என்னால் சுதந்தி 

ரமாக ஆட முடியவில்லை. மே.இ.தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை தூக்கி அடிக்கவில்லை. 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முக்கிய போட்டியான காலிறுதியில் முழு அளவு திறனை வெளிப்படுத்த வேண்டும் என்பது அவசியம். எங்களது வாழ்க்கையில் முக்கிய தருணம் இதுவாகும். இவ்வாறு யுவராஜ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்