எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் 23 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடாக ஏலம் விடப்பட்டதில் ஆ.ராசாவுக்கு ரூ. 7 ஆயிரம் கோடியும் அவரது கூட்டாளி சாதிக்பாட்ஷாவுக்கு ரூ. ஆயிரம் கோடியும் கிடைத்தது என்ற முக்கிய நபரும் சாதிக்பாட்ஷாவுக்கு மிகவும் வேண்டிய நண்பருமான ஒருவர் தெரிவித்தார். மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக தி.மு.க.வை சேர்ந்த தயாநிதி மாறன் இருந்தபோது சில விதிமுறைகளை மாற்றி அமைத்ததாக கூறப்படுகிறது. தயாநிதி மாறனுக்கு அடுத்து மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் பதவியை ஏற்ற ஆ.ராசா, இந்த புதிய விதிமுறைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறையாக ஏலம் விடாமல் முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்று ஒதுக்கீடு செய்தார். இதனால் மத்திய அரசுக்கு ரூ. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பல்வேறு முக்கிய நபர்களுக்கு கமிஷன் போய் சேர்ந்துள்ளது. பிரபல அரசியல் பெண் தரகர் நீரா ராடியா, மத்திய தொலைதொடர்புத்துறை முன்னாள் செயலாளர் உள்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு கமிஷன் போய் சேர்ந்திருக்கிறது. தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆ.ராசாவுக்கு 7 ஆயிரம் கோடியும் அவரது கூட்டாளியும் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்த சாதிக்பாட்ஷாவுக்கு ரூ. ஆயிரம் கோடியும் இந்த ஊழலில் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. ராசாவுக்கு கிடைத்த தொகையை துபாய் உள்பட அரபு நாடுகள் மற்றும் லண்டனில் உள்ள தனது மனைவி பரமேஸ்வரி வங்கிக்கணக்குகளில் டெபாசிட் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரைச் சேர்ந்த சாதிக்பாட்ஷாவுக்கு ரூ. ஆயிரம் கோடி கிடைத்தது என்று அவரது நண்பரும் முக்கிய பிரமுகருமான ஒருவர் தெரிவித்துள்ளார். சாதிக்பாட்ஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் 10 நாட்களுக்கு முன்பு அவர் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும், அப்போது ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனக்கு ரூ.ஆயிரம் கோடி கிடைத்தது என்றும் ராசாவுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கிடைத்தது என்றும் சாதிக்பாட்ஷா கூறியதாக அந்த முக்கிய பிரமுகர் கூறினார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஹவாலா ஊழலில் கிடைத்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணத்தை ஆ.ராசா மூடி மறைக்க சாதிக்பாட்ஷா மிகவும் உதவினார் என்று டெக்கான் குரோனிக்கலுக்கு அளித்த பேட்டியிலும் அந்த முக்கிய பிரமுகர் கூறியுள்ளார். இந்த முக்கிய பிரமுகரும் பெரம்பலூரைச் சேர்ந்தவர். மேலும் இவர் இடதுகம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகர் என்றும் கூறப்படுகிறது. சாதிக்பாட்ஷா என்னுடன் தொலைபேசியில் பேசும்போது, சி.பி.ஐ. விசாரணையில் அப்ரூவராக மாறும்படி தனது மனைவி வற்புறுத்துவதாகவும் அப்படி அப்ரூவராக மாறாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டுவதாகவும் சாதிக்பாட்ஷா தன்னிடம் தொலைபேசியில் கூறியதாகவும் தெரிவித்தார். அதேசமயத்தில் அப்ரூவராக மாறக்கூடாது என்று ராசாவுக்கு வேண்டியவர்கள் தொடர்ந்து வற்புறுத்துவதாகவும் சாதிக்பாட்ஷா தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ரம்ஜான் பண்டிகையை சாதிக்பாட்ஷா மிகவும் விமர்சையாக கொண்டாடியதாகவும் ஒரு மிகப்பெரிய விருந்து வைத்ததாகவும் பெரம்பலூர் மக்கள் கூறுகிறார்கள். அந்த விருந்திற்கு அனைத்து தரப்பு மக்கள் மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களையும் சாதிக்பாட்ஷா அழைத்ததாக சாதிக்பாட்ஷாவின் நண்பர்களில் ஒருவர் கூறினார். பெரம்பலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. புவனேஸ்வரி தேவராஜனுக்கு சாதிக்பாட்ஷாவை நன்றாக தெரியும். சாதிக்பாட்ஷா மிகவும் தாராள மனப்பான்மையுடன் நடந்துகொள்வார் என்றும் முகேஷ் அம்பானி மாதிரி ஒரு பெரும் தொழிலதிபராக வர வேண்டும் என்றும் அதேசமயத்தில் மக்களுக்கு தொண்டு புரிய வேண்டும் என்றும் சாதிக்பாட்ஷா விரும்பியதாக புவனேஸ்வரி தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் சாதிக்பாட்ஷாவிடம் குறைந்தது 100 குடும்பத்தினர் பணிபுரிந்தனர் என்பது சாதிக்பாட்ஷாவுக்கு நெருக்கமானவர்களுக்கு தெரியும் என்றும் கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.