முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுமின் நிலைய எதிர்ப்பாளர் உதயகுமாருக்கு ராஜபாளையத்தில் கறுப்புக்கொடி

ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

ராஜபாளையம்,மார்ச்.- 4 - கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பாளர் உதயகுமார், ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் பேசுவதாக இருந்தது. நாம் தமிழர் இயக்கம், அணுசக்தி எதிர்ப்பாளர்கள் மேடையில் அமர்ந்து பேசிக்கொண்டியிருந்தனர். இந்தநிலையில் பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது என காங்கிரஸ் கட்சியினரும் பா.ஜ.க.வினரும் மற்றும் சமூக நிறுவனங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு கோஷமிட்டனர். உதயகுமாரை கைது  செய்ய வலியுறுத்தியும் அவர் ராஜபாளையத்திற்குள் நுழையக்கூடாது என்று கூறியும் தேச துரோகியே திரும்பிப்போ என்று கோஷமிட்டும் கலவரத்தில் ஈடுபட்டனர்.போலீசாரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறிக்கொண்டு கல்வீச்சில் இறங்கினர். இதனால் ஒரு போலீசாரின் மண்டை உடைந்தது. உதயகுமாரின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. ராஜபாளையம் சங்கரன்கோயில் முக்குப்பகுதியில் மிகுந்த பரபரப்பும் பதட்டமும் நிலவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்