முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 நாள் வாகன சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல்

புதன்கிழமை, 23 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். 23 -​ கடந்த 10 நாட்கள் நடந்த வாகன சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் ஜக்கம்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தில்லை நடராஜன். சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் பொதுமக்கள் செல்லும் வாகனங்களை வழி மறித்து சோதனை செய்கின்றனர். பின்னர் அவர்களிடம் உள்ள பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். இதனால் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனை செய்வதற்கும், பணம் மற்றும் அத்தியாவசிய பொருட்களை பறிமுதல் செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

வழக்கை nullநீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் நேற்று முன்தினம் விசாரித்தனர். பின்னர் இதற்கு விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் மூத்தவக்கீல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, வாதாடினார். அப்போது அவர் கூறும் போது, வேட்பாளர்களின் செலவு கணக்கை கண்காணிக்கவும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும் தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் இரவு​ பகலாக வாகன சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்கள் நடந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறையான ஆவணங்கள் இல்லாதவர்களிடம் உள்ள பணம்தான் பறிமுதல் செய்யப்படுகிறது. மனுதாரர் தில்லை நடராஜன் கூறுவது போல் தேர்தல் ஆணையம் வாகன சோதனை என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கவில்லை என்றார். 

மனுதாரர் வக்கீல் சீனிவாஸ் கூறும்போது, வேட்பாளர்களின் வாகனங்களில் மட்டும்தான் தேர்தல் ஆணையம் சோதனை நடத்த வேண்டும். பொதுமக்களின் வாகனங்கள், பள்ளி வாகனங்களில் சோதனை நடத்துவது சரி அல்ல என்றார். இதையடுத்து nullநீதிபதிகள் தேர்தல் ஆணையத்தின் வக்கீலிடம், இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் ஏன் இன்னும் பதில் மனுதாக்கல் செய்யவில்லை. பதில் மனுதாக்கல் செய்யும் வரை வாகன சோதனைக்கு இடைக் கால தடை விதிக்கட்டுமா? என்றனர். இதற்கு வக்கீல் ராஜ கோபாலன் கூறும்போது, மனுதாரரின் மனு இன்று(நேற்று) காலைதான் எனக்கு கிடைத்தது. தேர்தல் ஆணையம் சார்பில் நாளைக்கே (இன்று) பதில் மனுதாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை இன்று தள்ளி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago