முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன நோயாளிகளுக்கு ஷாக் சிகிச்சை கூடாது: மத்திய அரசு

புதன்கிழமை, 23 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,மார்ச். 23 - மனநோயாளிகளை சங்கிலியால் பிணைக்க கூடாது. ஷாக் சிகிச்சை அளிக்க கூடாது என்று மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றை பிறப்பிக்கவுள்ளது. கடந்த 2001 ம் ஆண்டு ஏர்வாடி தர்ஹாவில் 20 க்கும் மேற்பட்ட மனநோயாளிகள் தீயில் கருகி இறந்தனர். இவர்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்ததால் இவர்களால் தப்பித்து செல்ல முடியவில்லை. அதே போல் மின்சார சிகிச்சை என்பதும், அவர்கள் ஏதாவது தவறு செய்து விட்டால் கடுமையான தண்டனை அளிப்பதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. எனவே மனநோயாளிகளை பாதுகாக்க 2010 ம் ஆண்டு மனநலன் பாதுகாப்பு சட்டம் என்ற சட்டத்தை மத்திய அரசு வடிவமைத்துள்ளது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்களாக, மன நோயாளிகளை எந்தவிதத்திலும் சங்கிலியால் பிணைக்க கூடாது. மன நோயாளிகளுக்கு மின்சார சிகிச்சை அளிக்க கூடாது. ஆண்கள் அல்லது பெண்களுக்கு சிகிச்சை என்ற பெயரில் மலட்டுத்தன்மை ஏற்படுத்தி விட கூடாது. அவர்களுக்கு மொட்டை அடிக்க கூடாது. மன நோயாளிகளை சீருடை அணியும்படி கட்டாயப்படுத்த கூடாது. இவ்வாறு மத்திய அரசு சட்டம் விரைவில் பிறப்பிக்கவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago