முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதனை படைக்க முயன்ற இலங்கை போலீஸ்காரர் பலி

புதன்கிழமை, 7 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

கொழும்பு, மார்ச்.7 - தொடர்ந்து பல மணி நேரம் குழிக்குள் இருந்து சாதனை படைக்க முயன்ற இலங்கை போலீஸ்காரர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள கந்தலே நகரை சேர்ந்தவர் ஜனகர் பஸ்நாயகே. 24 வயதான இவர் உள்நாட்டு பாதுகாப்பு படையில் காவலராக இருந்தார். நீண்ட நேரம் மண்ணில் புதைந்து புதிய சாதனை நிகழ்த்த விரும்பிய இவரது சாதனை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. சுமார் 10 அடி குழியில் அவரை உட்கார வைத்து மரப் பலகையை வைத்து அதன் மேல் மண்ணைப் போட்டு மூடினர். தொடர்ந்து ஆறரை மணி நேரம் அந்த குழிக்குள் உட்கார்ந்திருந்தார் அவர். மாலை 4 மணிக்கு மணலை அகற்றி மரப்பலகையை எடுத்து பார்த்த போது அவர் குழிக்குள் மயக்க நிலையில் இருந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக கந்தலேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூச்சுத்திணறி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்ட அவரது தாய் லீலாவதி உட்பட அங்கு கூடியிருந்தவர்கள் கண்ணீர் வடித்தனர். ஜனகர் ஏற்கனவே இரண்டரை மற்றும் 6 மணி நேரம் குழிக்குள் இருந்து சாதனை படைத்துள்ளார். இம்முறை தனது முந்தைய சாதனையை முறியடிக்க நினைத்த அவர் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago