முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயருகிறது

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச். 9 - 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவ டைந்த நிலையில் பெட்ரோல் விலை யை லிட்டருக்கு ரூ. 5 க்கு உயர்த்த மத் திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.  பெட்ரோல் விலை உயர்வை தள்ளிப் போட பொதுத் துறை நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இன்னும் ஒரு சில தினங்களில் விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. 

இந்த முறை லிட்டருக்கு குறைந்த பட்சம் ரூ. 5 உயர்த்தப்படலாம் என்று டெ ல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. 

பெட்ரோல் விலையை எண்ணெய் நிறு வனங்களே தீர்மானித்துக் கொள்ள கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந் தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் நிறுவனங்கள் விலையை உயர்த்தி வந் தன. 

கடந்த ஆண்டு தமிழகம், மேற்கு வங்க ம் உட்பட 5 மாநில தேர்தலின் போது, எண்ணெய் விலை உயர்வு இரண்டு மா தங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. 

அதே போல உ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்காக கடந்த இரண்டு மாத கா லமாக பெட்ரோல் விலை உயர்த்தப் படவில்லை. இதற்கிடையே ஈரான், சிரியா பிரச்சினை காரணமாக சர்வதே ச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. 

இதனால் தேர்தல் முடிந்தவுடன் விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தன. 

பெட்ரோல்விலை உயர்வுக்கு திரிணா முல் காங்கிரஸ் பெரும் எதிர்ப்பு தெரி வித்து வருகிறது. சமாஜ்வாடி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. 

தற்போது உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி அமோக வெற்றி பெற்று இருப்பதால் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அதன் குரல் ஓங்கி ஒலிக்கும் என எதிர்பார்க்க ப்படுகிறது. 

இதனால் பெட்ரோல் விலையை எவ்வளவு உயர்த்துவது என்பதில் மத்திய அர சு குழும்பிப் போய் உள்ளது. குறைந்த பட்சம் ரூ. 5 அல்லது ரூ. 6 உயர்த்த வே ண்டும் எனவும், இதற்கு மேலும் காலம் தாழ்த்தக்கூடாது எனவும் எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை கடந்த இர ண்டு நாட்களாக வலியுறுத்து வருகின்றன. 

இதனால் ஒரு சில தினங்களுக்குள் பெ ட்ரோல் விலை உயர்வு அறிவிப்பு வெ ளியாகும். 

எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டது போல பெட்ரோல் விலை யை லிட்டருக்கு ரூ. 5  உயர்த்துவது என் றும், எதிர்ப்பு கிளம்பியதால் பின்னர் அதனை ஓரளவிற்கு குறைத்துக் கொள்ளவும் மத்திய அரசு முடிவு செய்து இரு ப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவி த்தன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago