முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாபில் 5-வது முறையாக முதல்வராகிறார் பாதல்

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

சண்டிகார், மார்ச் 9 - பஞ்சாப் மாநிலத்தில் 5-வது முறையாக சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் தலைவர் பிரகாஷ்சிங் பாதல் முதல்வர் பொறுப்பை ஏற்கிறார். இதற்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளனன. இவர் 5 வது முறையாக முதல்வராகும் பட்சத்தில் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவிற்கு இணையான சானையை படைக்க இருக்கிறார். 

பஞ்சாபில் மொத்தமுள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சிரோன்மணி அகாலிதளம்- பாரதிய ஜனதா கூட்டணி மொத்தம் 68 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது. சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் தலைவர் பிரகாஷ்சிங் பாதல் ஏற்கனவே 4 முறை முதல்வராக இருந்திருக்கிறார். இந்த முதல்வர் பதவிக்கு வேறு யாரும் போட்டியில் இல்லாததால் இவரே 5 வது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்பார் என்றும் அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தயாராகிவிட்டன என்றும் அகாலிதள கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன. 

ஏற்கனவே மறைந்த ஜோதிபாசு 5 முறை மேற்குவங்க மாநில முதல்வராக இருந்திருக்கிறார். இப்போது பிரகாஷ்சிங் பாதலும் 5 வது முறையாக பொறுப்பை ஏற்றால் ஜோதிபாசுவுக்கு இணையான சாதனையை பாதலும் படைப்பார். பஞ்சாப்  மாநிலத்தில் புதிய அமைச்சர்கள் நியமனம் குறித்து பிரகாஷ்சிங் பாதல் கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து வருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் முதல்வர் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்