எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.11 - திங்களன்று தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார். ஐந்து மாநிலத்தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள சூழலில் நாளை, திங்களன்று (12-ந்தேதி) நாடாளுமன்றம் கூடுகிறது. ஏற்கனவே விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலையேற்றம் ஆகியவற்றுடன், சமீபத்தில் 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் உச்சநீதிமன்றம், முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ராஜாவின் காலத்தில் அனுமதி அளிக்கப்பட்ட ஸ்பெக்டரம் லைசன்சுகளை ரத்து செய்துள்ளதால், அதுபற்றிய குழப்பமும், மத்திய அரசை வாட்டுகிறது. ஏலத்தின் மூலம் புதிய லைசன்ஸ்சுகளை அளிப்பதா ன்பது குறித்து இன்னும் மத்திய அரசு முடிவு எடுக்க முடியாமல் திகைத்து வருகிறது.
இவற்றுடன் சமீபத்தில் ஐந்து மாநிலத் தேர்தல்களும் முடிந்துள்ளது. இதில் மணிப்பூரில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியைத்தக்க வைத்துக் கொண்டுள்ளது. உத்திரகாண்டில் ஆட்சியைப்பிடிக்க குதிரை பேரத்தை காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது. பஞ்சாபிலும், கோவாவிலும் எதிர்கட்சியான பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மிகப்பெரிய மாநிலமான உ.பியில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றுள்ளது. மொத்தத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இத்தேர்தலில் பலத்த அடியை மக்கள் அளித்துள்ளனர்.
இந்நிலையில் நாடாளுமன்றக் கூட்டம் நாளை தொடங்குகிறது. இப்பிரச்சினைகளின் எதிரொலி நாடாளுமன்றக் கூட்டத்திலும் இருக்கும். இதையுணர்ந்த மக்களவைத் தலைவர் மீராகுமார், மக்களவையை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார். இருந்தாலும் இதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. ஆகையால் இந்த நாடாளுமன்றக் கூட்டம் காங்கிரஸ் கட்சிக்கும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் சவால் மிகுந்ததாகவே இருக்கும்.
தமிழக பிரச்சனைகள்: இந்நிலையில் தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து அவ்வப்போது பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் எடுத்துரைத்துள்ளார். தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை மாநிலங்களில் அமைப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்தமுறை மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுவதையும், மாநில அரசுகளின் கையில் உள்ள அதிகாரங்களில் தலையிடுவதையும் எடுத்துக்கூறிய முதல்வர் ஜெயலலிதா இதுகுறித்து ஒருமித்த முடிவை எடுக்க மாநில முதல்வர்களின் கூட்டத்தைக் கூட்டவும், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதோடு உள்துறை அமைச்சர் மாநில தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி ஆகியோர் கொண்ட கூட்டத்தையும் கூட்டியுள்ளார். இதற்கும் முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துடன் பெருந்தன்மையாக, தமிழக உயரதிகாரிகளை இக்கூட்டத்திற்கு அனுப்பியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா போல ஏறக்குறைய 10-க்கும் மேற்பட்ட முதல்வர்கள் இந்த மையம் ஏற்படுவதை எதிர்த்துள்ளனர்.
மாநிலங்களின் எதிர்ப்பை மீறி மத்திய அரசு செயல்படுவதும், நாடாளுமன்றக் கூட்டத்தில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் கடும் மின்வெட்டு உள்ள நேரத்தில் பிறமாநிலங்களிலிருந்து மின்சாரம் பெற்றாலும், மின்பாதை சரியாக இல்லாததால் மத்திய அரசின் கிரிட்டிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரம் கிடைக்காமல் உள்ளது. மேலும் தமிழக அரசு கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தையும் வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஜெனீவாவில் இன்று கூடும் ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை 22 நாடுகள் ஆதரிக்கும் நிலையில் மத்திய அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இலங்கை மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிறநாடுகளின் உதவியுடன் இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றும், அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் முதல்வர் பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.
இவற்றுடன் ஏற்கனவே சத்துணவுத் திட்டம் மற்றும் விலையில்லாத பொருட்கள் வழங்குவது, பொது விநியோக முறையை சீராக நடைமுறைப்படுத்துவதில் முன்னேறிய நிலையிலுள்ள தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த அவசியம் இல்லை என்பதையும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
எம்.பி.க்களுடன் ஆலோசனை: இதுபோன்ற பல பிரச்சனைகளில் தமிழகத்தின் தேவைகளை மத்திய அரசு நிறைவேற்றாமல் காலம் தள்ளி வருகிறது. இச்சூழலில் நாளை கூட உள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.பிக்கள் எவ்வாறு நடந்துகொள்வது, என்ன என்ன பிரச்சனைகளை எழுப்புவது உட்பட பலவிஷயங்களை குறித்து பேச அ.தி.மு.க.வைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களை எம்.பிக்கள் கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கூட்டினார். இந்த கூட்டம் சுமார் ஒருமணி நேரம் நடந்து. இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 12.3.2012 அன்று தொடங்க உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா தலைமையில், அவரது இல்லத்தில் நேற்று கழக நாடாளுமன்ற மக்கள் அவை, மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத் தொடரில் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா ஆலோசனை வழங்கினார்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.