எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மார்ச் 13 - பாராளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தின் முதல்நாளான நேற்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உரையாற்றினார். அவரது உரையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் குறித்து எதுவும் இடம்பெறாததற்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. கூட்டத்தின் முதலாம் நாளான நேற்று இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா தேவிசிங் பாட்டீல் நீண்ட உரையாற்றினார். அப்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதம் வரை இருக்கும் என்பது உட்பட பல்வேறு பிரச்சனைகள் உரையில் இடம்பெற்றிருந்தது. ஜனாதிபதி உரையை அ.தி.மு.க. உறுப்பினர்கள் கவனமாக கேட்டுவந்தனர். உரையின் கடைசி நேரத்தில்கூட இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கமிஷன் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவந்து தாக்கல் செய்துள்ள தீர்மானத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அதாவது தீர்மானம் குறித்து ஜனாதிபதி உரையில் இதுவும் இடம் பெறவில்லை.
இலங்கையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இறுதிப்போரில் பாகிஸ்தான், சீனாவின் கருத்து கேட்டு அப்பாவி தமிழர்கள் மீது ரசாயான குண்டுகளை வெடித்து ஆயிரக்கணக்கான தமிழர்களை அதிபர் ராஜபக்சேவின் உத்தரவின்பேரில் கொன்று குவித்தனர். தப்பிய தமிழர்களை சிங்கள ராணுவம் கொடுமை செய்தது. இளைஞர்களாக இருந்தால் அவர்களின் உறுப்புக்களை வெட்டுவது, கண் பார்வையை கெடுத்து குருடர்களாக்கியும் பட்டினி போட்டும் கொடுமை படுத்தினர். இளம் பெண்களாக இருந்தால் அவர்களை வெறித்தனத்தோடு கற்பழிப்பது போன்ற கொடூர செயல்களிலும் ஈடுபட்டனர். அதோடு மட்டுமல்லாது முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு எந்தவித வசதியும் செய்து கொடுக்காமல் கடும் குளிரிலும்,வெய்யிலும் போட்டு வாட்டி எடுத்தனர். இதுகுறித்து நண்பு என்ற போர்வையில் கண்டுகொள்ளாமல் மத்திய அரசு இருந்து வந்தது. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டும், கொடுமைப்படுத்தியும் வந்ததை எப்படியோ வீடியோ படம் எடுத்தன. அதோடுமட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வசிக்கும் தமிழர்கள் வசிக்கும் தமிழர்கள் ஒன்று திரண்டு இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா.விடமும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளிடம் கோரின. அதனைத்தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கமிஷனில் இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்கோரும் தீர்மானத்தை கொண்டுவர அமெரிக்கா முடிவு செய்தது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா 3 முறை கடிதம் எழுதியுள்ளார். அதற்கு மன்மோகன் சிங் இதுவரை பதில் கடிதம் எழுதியதாக தெரியவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. சென்னை வந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு இலங்கை நட்பு நாடு என்றும் அதேசமயத்தில் தமிழர்களின் உணர்வுகள் புரிந்துகொள்ளப்படும் என்றும் மழுப்பலாக கூறினார். ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கமிஷனின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. தீர்மானம் குறித்து ஜனாதிபதி உரையில் மத்திய அரசு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஜனாதிபதி உரையின் இறுதியில் ராஜ்யசபையின் அ.தி.மு.க. குழுத்தலைவர் மைத்ரேயன் குறுக்கிட்டு, இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து மத்திய அரசு கருத்து எதுவும் தெரிவிக்காததற்கு கண்டனம் தெரிவித்தார். இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து மத்திய அரசு தனது நிலையை விளக்காதது ஏன்? தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்து வருகிறது என்றும் மைத்ரேயன் கடுமையாக குற்றஞ்சாட்டினர். இதற்கு பாராளுன்ற இருசபை எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்தனர். ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் குறித்தும் உரையில் இடம்பெறாததற்கு அந்த மாநிலத்தை சேர்ந்த பெரும்பாலான எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.