முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரன்வேயில் தரைதட்டிய விமானம்: விமானிகளிடம் விசாரணை

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

மும்பை, மார்ச். 14 - அகமதாபாத்தில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது அதன் வால் பகுதி ரன்வேயில் தரை தட்டியது. சுமார் 10 அடி தூரம் தரையில் உராய்ந்து கொண்டு சென்ற பின்தான் அந்த விமானம் நின்றது. இதையடுத்து விமானத்தின் இரு பைலட்டுகளையும் சஸ்பெண்டு செய்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதில் ஒருவர் பெண் பைலட் ஆவார். இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த 121 பயணிகளில் யாரும் காயமடையவில்லை. மும்பை விமான நிலையத்தின் மெயின் ரன்வேயில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானத்தை தவறான முறையில் தரையிறக்கியதே இந்த சம்பவத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்