முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவிலில் சில்வர் குடம் சப்ளை செய்த திமுகவினர்

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை, மார்ச் 14 - சங்கரன்கோவில் தொகுதியில் சில்வர் குடம் சப்ளை செய்தததால் மற்ற கட்சியினர் போலீசில் புகார் செய்தனர்.சங்கரன்கோவில் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜவஹர்குமாரை ஆதிரித்து கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பிரச்சாரத்தை துவக்கினார். ஏற்கனவே அழகிரி வந்து கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் சங்கரன்கோவில் கவிதாலயா தியேட்டர் அருகில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்தார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக 300 குடங்களில் நிரப்பப்பட்ட பூவுடன் பெண்கள் நிறுத்தப்பட்டு வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் பிரச்சாரம் முடிந்தவுடன் அந்த புது குடங்கள் அந்த பெண்களுக்கே கொடுக்கப்பட்டது. இதையடுத்து வந்த புகாரையடுத்து போலீசார் அந்த குடங்களை பறிமுதல் செய்தனர்.

முன்னதாக வாக்காளர்களுக்கு 300 குடங்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு இடங்களில் தாம்பூலத்தட்டுக்களும் கொடுத்ததாக வந்த புகாரையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அன்பளிப்புக்களை கொடுத்து வாக்குகளை பெற்றுவிடலாம் என கருதி திமுகவினர் திருமங்கலம் பாணியை சங்கரன்கோவிலிலும் அரங்கேற்றி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்