முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் வருகை: சங்கரன்கோவிலில் பலத்த பாதுகாப்பு

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை, மார்ச் 14 - முதல்வர் ஜெயலலிதா இன்று சங்கரன்கோவிலுக்கு பிரச்சாரத்திற்காக வருகை தருகிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் ஜெயலலிதா சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துசெல்வியை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இன்று சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 10 மணிக்கு திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்குகிறார். பின்னர் திருவேங்கடம் மெயின் பஜாரில் இருந்து பிரச்சாரத்தை துவக்குகிறார். அதன் பின்னர் குருவிகுளம் ஒன்றியத்துக்குட்பட்ட புதுப்பட்டி, வெள்ளாளன்குளம் விலக்கு,குறிஞ்சான்குளம், நாலுவாசல், வாகைகுளம், சிதம்பராபுரம் விலக்கு, மலையான்குளம் விலக்கு ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.

தொடர்ந்து சங்கரன்கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட ராமநாதபுரம் விலக்கு, சங்கரன்கோவில் நகராட்சி பகுதியான பாட்டத்தூர், புதியபஸ்நிலையம் விலக்கு, தெற்குரதவீதி, தேரடி திடல், மேலநீலிதநல்லூர் ஒன்றியம் பெரியகோவிலான்குளம், திருமலாபுரம் விலக்கு, பனவடலிசத்திரம், வன்னிக்கோனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். பின்னர் தேவர்குளத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். பின்னர் தேவர்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட்டிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

முதல்வர் ஜெயலலிதா சங்கரன்கோவில் வருகையையொட்டி சங்கரன்கோவில் தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஹெலிபேடுகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், வெடிகுண்டு நிபுணர்கள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டு மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர பாதுகாப்புகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்