முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராவணனுக்கு ஒருநாள் போலீஸ் காவல்: ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். 14 - சசிகலா உறவினர் ராவணனை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு சென்னை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மோசடி வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சசிகலா உறவினர் ராவணன் மீது பல்வேறு புகார்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், ராவணன் தன்னிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்து விட்டதாக பொன்னுசாமி என்பவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ராவணனை விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை ஜே.எம். 6 நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், நாளை பகல் வரை ராவணனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்