முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் வயதான பெண் சிங்கம் சாவு

புதன்கிழமை, 23 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

போபால்,மார்ச்.24 - இந்தியாவின் வயதான பெண் சிங்கம் (23) இறந்துபோனது. ரெஹனா என்ற அந்த பெண் சிங்கம் போபாலில் உள்ள மிருககாட்சி சாலையில் இருந்தது. இதற்கு வயதானதால் அஜீரன கோளாறு ஏற்பட்டது. அதனால் கடந்த பல வாரங்களாக சுகவீனமடைந்த நிலையில் இருந்த அந்த பெண் சிங்கம் கடந்த 21-ம் தேதி இறந்தது. இந்தியாவில் இருக்கும் சிங்கங்களில் இதுதான் வயதானது என்று மத்திய மிருக ஆணைய பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த பெண் சிங்கம் 4 வயது குட்டியாக இருந்தபோது கடந்த 1992-ம் ஆண்டு இந்தூர் மிருகசாட்சி சாலையில் இருந்து போபாலில் உள்ள வான் விஹார் மிருககாட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பெண் சிங்கம் இறந்துவிட்டதால் இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கை 14 ஆக குறைந்துவிட்டது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்