எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.15 - கடந்த நான்காண்டுகளாக அறிவிப்பு நிலையிலேயே இருந்த பல மின்திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மின்பற்றாக்குறைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா உறுதி கூறியுள்ளார். சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் 2012 அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, தமது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தின் முதல் இடமான திருவேங்கடம் பஜார் என்ற இடத்தில் கழக வேட்பாளர் முத்துச்செல்வியை ஆதரித்து ஆற்றிய உரை வருமாறு:-
முன்னாள் அமைச்சர் கருப்புசாமியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கியவர். உங்களுடைய அன்பைப் பெற்றிருந்தார். அவருடைய இடத்தை நிரப்புவதற்காக அன்புச் சகோதரி முத்துச்செல்வி இந்த இடைத் தேர்தலில் கழக வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். இவரது தந்தை சங்கரலிங்கம் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் இந்தத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். கழக வேட்பாளர் முத்துச்செல்வி பொறியியல் பட்டம் பெற்றவர். உங்களுக்கு நன்கு அறிமுகமானவர். கருப்பசாமியைப் போலவே அன்போடும், எளிமையோடும் பழகக் கூடியவர். என்னுடைய வேண்டுகோளினை ஏற்று, அன்புச் சகோதரி முத்துச்செல்வியை நகர மன்றத் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். அவரை சட்டமன்றத்திற்கு அனுப்புமாறு உங்களையெல்லாம் கேட்டுக் கொள்ளவே நான் இங்கு வந்திருக்கிறேன்.
நான் பொறுப்பு ஏற்றவுடன் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி;
முதியோர் உதவித் தொகை 1,000 ரூபாயாக அதிகரிப்பு; திருமண உதவித் திட்டங்களின் கீழ் 25,000/ ரூபாய் உதவித் தொகையுடன் 4 கிராம் தங்கம்; பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கக் காசுடன் 50,000/ ரூபாய் உதவித் தொகை; முதலமைச்சரின் விரிவாக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்; முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்;
குறைந்த கட்டணத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. இணைப்பு;
விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி என பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் எனது அரசால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
அதுமட்டும் அல்லாமல், மாணவமாணவியர், நலன் காக்கும் வகையில் 1, 2 மற்றும், கல்லூரி படிப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு மடிக் கணினி;
10 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு சிறப்பு ஊக்கத் தொகை; விலையில்லா சைக்கிள்; பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடைகள்; காலணிகள் ஆகியவை உங்கள் அன்புச் சகோதரியின் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. இவையன்றி ஒரே மாதிரியான புத்தகப் பைகள்; கணித உபகரணப் பெட்டி; வண்ணப் பென்சில்கள்; புவியியல் வரைபடங்கள் ஆகியவற்றை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். தமிழ் நாட்டில் வெண்மைப் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வண்ணம் ஆடுகள், கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமூக நீதியை காக்கும் வகையில், வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து கடைபிடிக்க நான் வழிவகை செய்துள்ளேன். சட்டம் ஒழுங்கைப் பொறுத்த வரையில், சட்ட விரோதிகளின் ஆட்சி என்ற நிலை மாறி, சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டு உள்ளது. பொதுமக்களின் நண்பனாக காவல் துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மின்சாரத்தைப் பொறுத்த வரையில், முந்தைய தி.மு.க. அரசின், நிர்வாக சீர்கேடு மற்றும், மெத்தனப் போக்கு காரணமாக, தமிழகத்தில் மின் பற்றாக்குறை, தொடர்ந்து நிலவி வருகிறது. இந்தப் பற்றாக்குறையை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன். 600 மெகாவாட் மின் திறன் கொண்ட வட சென்னை விரிவாக்க மின் திட்டம் யூனிட்1; 500 மெகாவாட் மின் திறன் கொண்ட வல்லூர் கூட்டு முயற்சி மின் திட்டம்ஐ; 500 மெகாவாட் மின் திறன் கொண்ட வல்லூர் கூட்டு முயற்சி மின் திட்டம்ஐஐ; 500 மொகாவாட் மின் திறன் கொண்ட மூன்றாவது யூனிட்; 600 மொகாவாட் மின் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் நிலையத்தின் மூன்றாவது நிலை; 600 மெகாவாட் மின் திறன் கொண்ட வடசென்னை அனல் மின் நிலையத்தின் திட்டம் யூனிட் ஐஐ ஆகிய மின் திட்டப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 1950 மெகாவாட் மின்சாரமும்; அக்டோபர் மாதத்தில் மேலும் 600 மெகாவாட் மின்சாரமும் கூடுதலாக கிடைப்பதற்கு வழிவகை செய்துள்ளோம்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மின் பற்றாக்குறை படிப்படியாக குறைந்துவிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில், வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கலாம் என்று நினைத்தாலும், மின் தொடர் நெருக்கடி காரணமாக அதை பெற முடியாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும், எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு, கடந்த நான்கு ஆண்டுகாலமாக அறிவிப்பு நிலையிலேயே இருந்த உடன்குடி அனல் மின் திட்டம் தமிழ்நாடு அரசின் திட்டமாக செயல்படுத்தப்படும். இன்னும் பல மின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மின்சார உற்பத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் நானே தனிக் கவனம் செலுத்தி வருகிறேன். மின் பற்றாக்குறைக்கு விரைவில் முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். எம்.ஜி.ஆரின் நல்லாசியோடு எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், இலங்கை இனப் படுகொலையில் ஈடுபட்டவர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கவும்; அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும்; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது. ஆனால், மத்திய அரசு இது நாள் வரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக இலங்கைக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவின் முன்பு அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா எதிர்க்கப் போவதாக செய்திகள் வருகின்றன. இது தான் காங்கிரஸ் கட்சிக்கு தமிழர்கள் மீதுள்ள அக்கறை.
தமிழர் நலன், தமிழ்நாட்டின் நலன் என்ற குறிக்கோளுடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்தத் தொகுதியில் அமைந்துள்ள மனோ கல்லூரி பல ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதியுமின்றி வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. சொந்தக் கட்டடம் கட்டித் தர வேண்டும் என்று கடந்த ஆண்டு என்னிடம் நீங்கள் கோரிக்கை வைத்தீர்கள். உடனே அதனை நிறைவேற்றுமாறு நான் உத்தரவிட்டேன். தற்போது இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு கலைக் கல்லூரி அமைத்துத் தரப்பட வேண்டும்; பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்; மானூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தரப்படும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும்; என பல்வேறு கோரிக்கைகள் என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சங்கரன்கோவில் மக்கள் சங்கடம் இன்றி, சகல வசதிகளுடன் சந்தோஷமாக வாழ்வதற்கான அனைத்து தேவைகளையும் நாங்கள் நிச்சயம் ர்த்தி செய்வோம். மாற்றம் தந்த உங்களுக்கு ஏற்றம் தரும் வகையில் செயல்பட்டு வரும் உங்கள் அன்புச் சகோதரியின் அரசுக்கு, இந்த இடைத் தேர்தலில் உங்கள் பேராதரவினை நீங்கள் நல்க வேண்டும். நில அபகரிப்புக்கு பெயர் போன திமுகவிற்கு இந்தத் தேர்தலில் நீங்கள் தக்கப் பாடம் புகட்ட வேண்டும். தி.மு.க. வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். கழக வேட்பாளர் அன்புச் சகோதரி முத்துச்செல்விக்கு, எம்.ஜி.ஆர் கண்ட வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொண்டு என்று கூறி விடை பெறுகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.