முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கியாஸ் கசிவை தெரிந்து கொள்ள புதிய கருவி கண்டுபிடிப்பு

புதன்கிழமை, 23 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா,மார்ச்.24 - கியாஸ் சிலிண்டர்களில் கசிவு ஏற்படுவதை தெரிந்துகொள்ள புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் உபயோகிக்கப்படும் கியாஸ் சிலிண்டர்களில் கசிவு ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் சிலிண்டர் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்படுகிறது. கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்படுவதை கண்டுபிடிக்க ஒரு புதிய கருவியை கவுதம் குமார் என்பவர் கண்டுபிடித்துள்ளார். இவர் ஒரிசா மாநிலம் புவனேஸ்வரத்தை சேர்ந்தவர். சுரக்ஷா என்ற கருவியை இவர் கண்டுபிடித்துள்ளார். இந்த கருவியானது கியாஸ் சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டால் உடனடியாக அது பற்றி 4 பேருக்கு செல்போனில் எச்சரிக்கை மணியை ஒலிபரப்பி செய்தியை அனுப்பும். இந்த கருவியை கண்டுபிடித்ததற்காக கவுதமிற்கு நேற்றுமுன்தினம் பெங்களூரில் இஎம் டெக் இந்தியா சார்பாக விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அமெரிக்காவில் 112 ஆண்டுகால பழமையான மாசஸ்சூசெட்ஸ் தொழில்நுட்ப இன்ஸ்டியூட் சார்பாக வெளியாகும் இதழிலும் செய்தி வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்