முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர மேல்சபை தேர்தல் - ஜெகன் வேட்பாளர்கள் வெற்றி

புதன்கிழமை, 23 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத்,மார்ச்.24 - ஆந்திர மேல்சபையில் காலியாக இருந்த 9 கவுன்சிலர்கள் பதவிக்கு நடந்த தேர்தலில் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ஆதரித்த 3 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.ஆந்திராவில் உள்ள கடப்பா,சித்தூர், மேற்குகோதாவரி ஆகிய மாவட்டங்களில் இருந்து மேல்சபைக்கு சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களுக்கு ஜெகன்மோகன் ஆதரவு கொடுத்தார். அதனால் இந்த மாவட்டங்களில் போட்டியிட்ட 3 பேர் வெற்றிபெற்றுள்ளனர். ஆனால் தேர்தல் முடிவு நேற்று பிற்பகல் வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. அதேசமயத்தில் வெற்றிபெற்ற 3 பேர்களில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒரு ஓட்டு வித்தியாசத்திலும் கடப்பா மாவட்டத்தில் போட்டியிட்டவர் 9 ஓட்டுக்கள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றனர். 

ஜெகன்மோகன் ஆதரவாளர்கள் வெற்றிபெற்றிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்லாது முதல்வர் கிரன் குமார் ரெட்டிக்கும் ஒரு மிகப்பெரிய பின்னடைவு என்று கூறப்படுகிறது. கிரன் குமார் ரெட்டியின் சொந்த மாவட்டமான சித்தூரில் காங்கிரஸ் தோல்வி அடைந்துவிட்டது. சித்தூர் மாவட்டத்தில் மறு ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. அதில்தான் ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவு வேட்பாளர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்