முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் கரண் நடித்த கந்தா படத்தை வெளியிட தடை

வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, மார்ச். 16​- தமிழகம் முழுவதும் இன்று வெளியாக இருக்கும் நடிகர் கரண் நடித்த கந்தா படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை சூளையை சேர்ந்த எஸ்.மோகன்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கந்தா படம் வெளியிட தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

வி.பி.பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் வி.பழனிவேல் என்னை அணுகி, நான் நடிகர் கரண் கதாநாயகனாக நடிக்கும் கந்தா என்ற படத்தை பாபு விஸ்வநாதன் டைரக்ட் செய்ய என்னுடைய நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. எனக்கு கடனாக ரூ.25 லட்சம் நீங்கள் வழங்கினால் படத்தை முடிக்க மிகவும் உறுதுணையாக இருக்கும் என கேட்டார். நானும் 24.9.2009 அன்று புரோநோட்டில் கையெழுத்து பெற்று பணத்தை கடனாக கொடுத்தேன். அந்த பணம் திருப்பி தரவில்லை. கேட்டதற்கு செக் ஒன்றை கொடுத்தார். அந்த செக் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. 

பிறகு நான் அவரை அணுகியபோது, உங்களுக்கு தர வேண்டிய பணத்தை தந்த பிறகு தான் நான் கந்தா படத்தை வெளியிடுவேன் என பிரமான பத்திரம் எழுதி கொடுத்தார். நானும் நம்பினேன். ஆனால் இப்பொழுது படம் இன்று வெளியிடுவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆகவே எனக்கு தர வேண்டிய பணத்தை தராமல் கந்தா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார். 

இந்த மனு மீதான விசாரணை முதல் உதவி நீதிமன்றத்தின் நீதிபதி பால்ராஜ் முன்பு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி பால்ராஜ், வரும் 19-ம் தேதி வரை படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் 19-ம் தேதிக்குள் பழனிவேலை பதில் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்