எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,மார்ச்.24 - ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட தொழில் அதிபர் சாதிக் பாட்ஷா, தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் திட்டமிட்டே கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில், சாதிக் பாட்ஷா வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்கு ஏதுவாக அரங்கேற்றப்பட்ட செயற்கையான நாடகம்தான் இது என்றும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சாதிக் பாட்ஷா விவகாரத்தில் மர்மம் மென்மேலும் வலுத்துவருகிறது.
நாட்டிற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆ.ராசாவின் நெருங்கிய கூட்டாளியான சாதிக் பாட்ஷா, சென்னை தேனாம்பேட்டையில் எஙுடீடீடூ ஏச்சீஙூடீ டஙுச்ஙிச்சிடீஙுஙூ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைமாறிய பணம் சாதிக் பாட்ஷா மூலமாக வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின. இதனைத் தொடர்ந்து, அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு, மூன்றாவது மனைவியின் மகள் கனிமொழி ஆகியோரிடமும் சி.பி.ஐ விசாரணை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த 16-ம் தேதி, சாதிக் பாட்ஷாவிடம் விசாரணை நடத்த இருந்தனர். இதற்காக டெல்லி செல்லும் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த சாதிக் பாட்ஷா, அன்றைய தினம் பகல் 1 மணியளவில் தேனாம்பேட்டையில் தனது இல்லத்தில், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சாதிக் பாட்ஷாவின் திடீர் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
வீட்டிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சாதிக்பாட்ஷாவின் உடல், பின்னர் அந்த மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டபோது, முழுவதுமாக துணியால் மூடப்பட்டது ஏன்?
வீட்டின் இருந்து, தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வண்டியில் சாதிக் பாட்ஷா ஏற்றப்பட்டபோதே, அவர் இறந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதன் பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன?
சாதிக் பாட்ஷா இறந்து 3 மணி நேரம் வரை, உடல் இருந்த தனியார் மருத்துவமனைக்கோ, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட ராயப்பேட்டை மருத்துவமனைக்கோ அவரது மனைவி வராதது ஏன்?
சாதிக் பாட்ஷா தற்கொலை செய்து கொண்டபோது அணிந்திருந்த உடைகள், தனியார் மருத்துவமனையில் அகற்றப்பட்டது ஏன்?
கொலையா? தற்கொலையா? என்பதைக் கண்டுபிடிக்கப்பதற்கான தடயங்களை மறைப்பதற்காக அவரது உடைகள் திட்டமிட்டே அகற்றப்பட்டனவா?
சாதிக் பாட்ஷா தூக்கில் தொங்கியதாகக் கூறப்படும் அறையின் மொத்த உயரம் 9 அடி. அதில் மூன்றேகால் அடி உயரத்திற்கு கம்பி பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளது ஐந்தேமுக்கால் அடி ஐந்தரை அடி உயரமுள்ள சாதிக் பாட்ஷா எவ்வாறு அதில் தற்கொலை செய்து கொள்ள முடியம்? என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
கருணாநிதி மகள் கனிமொழியிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், டெல்லி நீதிமன்றத்தில் வரும் 31-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளனர். இதனிடையே, சாதிக் பாட்ஷா அப்ரூவராக மாற முடிவு செய்திருந்ததாகவும், இதனை அறிந்த சிலர் தொடர்ந்து சாதிக் பாட்ஷாவை மிரட்டி வந்தததாகவும் கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் சாதிக் பாட்ஷாவிற்கு துளியும் கிடையாது என்று அவரது நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். சாதிக் பாட்ஷாவின் உடலில் கொலைக்கான அடையாளங்கள் இருப்பதாகவும் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுமட்டுமின்றி, இது திட்டமிட்ட படுகொலை என்றும் பல்வேறு தரப்பினர் தெரிவிக்கிறார்கள்.
இதனிடையே, சாதிக் பாட்ஷா விவகாரத்தில் அரங்கேற்றப்பட்டவை அனைத்தும் செயற்கையான நாடகமே என்றும், அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்கு ஏதுவாக இந்த நாடகம் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சாதிக் பாட்ஷாவை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு, ஏற்கனவெ இறந்துபோன வேறு ஒருவரின் உடலை, சாதிக் பாட்ஷா உடல் எனக் கூறி, மோசடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக, சாதிக் பாட்ஷாவின் உடலை, பிரேதப் பரிசோதனை செய்த சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர்.ய.டெக்கால் (ய.ஈஉகூஹங்) தான்பரிசோதனை நடத்தியது சாதிக் பாட்ஷாவின் உடல்தானா? என்பது தனக்குத் தெரியாது என்றும், தன்னிடம் அளிக்கப்பட்ட உடல், சாதிக் பாட்ஷாவின் உடல் என்று போலீசார் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விராசணை கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களையும், குடும்ப நிறுவனத்தையும் நெருங்கியுள்ள நிலையில், ஊழலில் முக்கியத் தொடர்புடைய சாதிக் பாட்ஷா, தற்கொலை செய்து கொண்டாரா? திட்டமிட்டே கொலை செய்யப்பட்டாரா? அல்லது வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டாரா? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருப்பது மர்ம முடிச்சுக்களை மென்மேலும் வலுவடையச் செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்