முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சின் டெண்டுல்கருக்கு ஜார்கண்ட் சட்டசபை பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

ராஞ்சி, மார்ச். - 18 - சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தில் சதம் கண்ட சச்சின் டெண்டுல்கருக்கு ஜார்கண்ட் மாநில சட்டசபை நேற்று தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டது.  நேற்று முன்தினம் இந்திய அணிக்கும், வங்கதேச அணிக்கும் இடையே நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சதத்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். இதை அனைத்து தரப்பினரும் பாராட்டி வாழ்த்தி வருகிறார்கள். ஜார்கண்ட் மாநில சட்டசபையிலும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.  இம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி கரவொலி எழுப்பினார்கள். அதன் பிறகு டெண்டுல்கரை பாராட்டி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. சச்சினின் சாதனையை இந்த மன்றம் பாராட்டுகிறது என்று சபாநாயகர் சி.பி. சிங் தெரிவித்தார். 38 வயதான சச்சின் டெண்டுல்கர் மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் சபாநாயகர் வாழ்த்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்