எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மிர்பூர், மார்ச் - 19 - முத்தரப்பு ஒரு நாள் தொடரில் நேற்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் இந்தியா அதிரடியாக விளையாடி பாகிஸ்தானை வெற்றிகண்டது. இதன்மூலம் இந்தியா இறுதிபோட்டி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. வங்கதேசத்தின் மிர்பூர் நகரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா தான் விளையாடிய முதல் போட்டியில் இலங்கை அணியை வென்றது. ஆனால் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனால் இந்தியா நேற்று பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய போட்டி மிக முக்கியமான போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றிபெற்றே தீரவேண்டும் என்ற இக்கட்டான நிலையில் களமிறங்கியது. ஏற்கனவே போனஸ் புள்ளிகளுடன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட பாகிஸ்தான் அணி நெருக்கடி எதுவும் இல்லாமல் களமிறங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் முகமது ஹபீஸ் மற்றும் நஸீர் ஜாம்ஷெட் ஆகியோர் மிகச் சிறப்பான துவக்கத்தை தந்தனர். இந்த ஜோடி இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து ரன்களைக் குவித்தது. இந்த ஜோடியை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்த ஜோடி 100 ரன்களை 17.3 ஓவர்களில் அடைந்தது. 200 ரன்களை 196 பந்துகளில் பெற்றது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்த துவக்க ஜோடியில் முகமது ஹபீஸ் முதலில் சதமடித்தார். அடுத்து நஸீர் ஜாம்ஷெட் 98 பந்துகளில் சதமடித்தார். பாக். அணி 224 ரன்களை எடுத்திருந்தபோது முதல் விக்கெட்டாக நஸீர் ஜாம்ஷெட் அவுட்டானார்.112 ரன்கள் எடுத்திருந்த நஸீர், அஸ்வின் பந்தில் பதானால் கேட்ச் பிடிக்கப்பட்டார். அடுத்து 225 வது ரன்னில் முகமது ஹபீசும், அசோக் டிண்டாவின் பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய யூனிஸ்கான், உமர் அக்மலுடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பாகிஸ்தான் அணியின் ரன் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. 24 பந்துகளில் 28 ரன்களை அடித்த அக்மல், குமாரின் பந்தில் காம்பீரால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து யூனிஸ்கான் 34 பந்துகளில் 52 ரன்களை குவித்து, குமாரின் பந்தில் சுரேஷ் ரெய்னாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். ஷாகித் அப்ரிடி 9 ரன்களிலும், ஹம்மத் ஆஸம் 4 ரன்களிலும் அவுட்டாகினர். இதையடுத்து பாக். அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களை குவித்தது. மிஸ்பா உல் ஹக் 4 ரன்களுடனும், உமர்குல் ரன் எதுவும் எடுக்காமலும் இருந்தனர். இந்திய தரப்பில் குமார் மற்றும் டிண்டா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், பதான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. துவக்க வீரர்களாக சச்சின் டெண்டுல்கரும், காம்பீரும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காம்பீர் ரன் எதுவும் எடுக்காத நிலையில் முகமது ஹபீஸின் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து விராட் கோலி, சச்சினுடன் ஜோடி சேர்ந்தார் இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடியது. சச்சின் இந்த போட்டியில் துவக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினார். 19.3 ஓவர்களில் இந்திய அணி 133 ரன்களை எடுத்திருந்தபோது சச்சின் தனது 52 வது ரன்னில் சயீத் அன்வர் பந்தில் யூனிஸ்கானிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதையடுத்து கோலியுடன் ரோஹித் சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் பாக். பந்துவீச்சை பதம்பார்த்தது. பாகிஸ்தான் அணியைப் போலவே இந்திய அணியும் 196 பந்துகளில் 200 ரன்களை கடந்தது. விராட் கோலி 97 பந்துகளில் 100 ரன்களை கடந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய இந்திய அணி 45.5 ஓவர்களில் 305 ரன்களை கடந்திருந்தபோது 68 ரன்களை எடுத்திருந்த ரோஹித் சர்மா, உமர்குல்லின் பந்தில் அவுட்டானார். 47.1 ஓவரில் இந்திய அணி 318 ரன்களை எடுத்திருந்தபோது 148 பந்துகளில் 183 ரன்களை எடுத்திருந்த விராட் கோலி, உமர்குல்லின் பந்தில் ஹபீசால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தோனி பவுண்டரி அடித்து இந்தியாவை வெற்றிபெறச் செய்தார். இந்திய அணி 47.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாக். அணியை வென்றது. அதிரடியாக 183 ரன்களை குவித்த விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்