முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிரமம்: பிரதமர் வருத்தம்

திங்கட்கிழமை, 19 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 20 - ஒன்பது சதவிகித வருடாந்திர பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கு சிக்கலான முடிவுகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால் கூட்டணி கட்சிகளின் நிர்பந்தத்தால் இதுபோன்ற முடிவுகளை எடுப்பதில் அரசுக்கு சிரமம் ஏற்படுகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். கடந்த 14 ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த அப்போதைய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கலந்தாலோசிக்காமல் ரயில்கட்டணத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது. இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேலிடம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் தங்களது கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதியை ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து விலக்குமாறு பிரதமருக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை அடுத்து தினேஷ் திரிவேதி தனது ரயில்வே அமைச்சர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். தினேஷ் திரிவேதிக்கு பதிலாக முகுல்ராயை ரயில்வே அமைச்சராக நியமிக்க வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் உயர்த்தப்பட்ட ரயில் பயணிகள் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்பந்தம் செய்து வருகிறது. 

பாராளுமன்றத்தின் லோக்சபையில் நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தினேஷ் திரிவேதி 2012 - 13 ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து ரயில்வே துறையை தொலைநோக்கு பார்வையோடு சில மாற்றங்களை செய்துள்ளார். ஆனால் இவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த ராஜினாமா கடிதம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றார். 

ஆண்டுதோறும் 9 சதவிகித பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்பதில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் அந்த பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு சில சிக்கலான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கிறது. இதனால் பல சவால்களை சமாளிக்க வேண்டியுதம் இருக்கிறது. இதுபோன்ற சிக்கலான முடிவுகளை எடுப்பதில் கூட்டணி கட்சிகளின் நிர்பந்தத்தால் அரசுக்கு அதிக சிரமம் ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் கூட்டணி கட்சிகள் என்று மறைமுகமாக குறிப்பிட்டது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago