எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி, மார்ச் 24 - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து இந்த தொகுதியில் தேர்தல் களம் வி.ஐ.பி. தேர்தல் களமாக மாறிவிட்டது. ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவதையொட்டி அந்த தொகுதி மக்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று(வியாழன்)திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நிலசீர்திருத்த உதவி ஆணையர் அலுவலகத்தில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அதன்பின்பு திருச்சியில் அவர் தங்கி 3 நாட்கள் திருச்சி மாநகரம் மற்றும் கிராமம் கிராமமாக வேன் மூலம் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு திரட்டுகிறார்.
முன்னதாக இன்று(24ந்தேதி) காலை சென்னையில் இருந்து விமானம்மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார். பின்பு அவர் விமான நிலையத்தில் 12 கிலோ மீட்டர் தூரமுள்ள ஸ்ரீரங்கத்திற்கு கார் மூலம் வருகை தருகிறார். வழிநெடுகிலும் ஜெயலலிதாவிற்கு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். பின்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்கு சென்று ஜெயலலிதா பெருமாளை தரிசிக்கிறார். அதைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வழியாக திருச்சி பழைய கலெக்டர் அலுவலகம் வருகிறார். அங்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். பின்னர் சங்கம் ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கிறார்.
மாலை 4 மணிக்கு சங்கம் ஓட்டலில் இருந்து புறப்படும் ஜெயலலிதா தில்லைநகர், மெயின்காட்கேட் வழியாக ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மாம்பழச்சாலைக்கு வருகிறார். அங்கிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்குகிறார். அதைத்தொடர்ந்து பெரியார் நகர், வீரேஸ்வரம், ராகவேந்திரா வளைவு, தெப்பக்குளத்தெரு கார்னர். மேலச்சித்திரை வீதி, கீழஅடையவளஞ்சான் வீதி, காந்திரோடு, சென்னை மெயின்ரோடு, திருவானைக்காவல் சன்னதி வீதி, நடுகொண்டம்பேட்டை ஆகிய பகுதிகளில் தனக்காக பிரச்சாரம் செய்யும் ஜெயலலிதா, அதன் பின்பு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிந்தாமணி அண்ணாசிலை மரக்கடை, காந்திமார்க்கெட், பாலக்கரை ஆகிய பகுதிகளில் கிழக்கு தொகுதி வேட்பாளர் ஆர்.மனோகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். இரவு திருச்சியில் தங்குகிறார்.
இரண்டாம் நாள் பிரச்சாரமாக 25-ந்தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு வேன் மூலம் புறப்படும் ஜெயலலிதா முதலில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராப்பட்டி, எ.புதூர் ஆகிய இடங்களில் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம்பிச்சையை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். அங்கிருந்து தனது ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் யூனியன் ஆபீஸ், அழுந்தூர், சூராவளிப்பட்டி, சன்னாசிப்பட்டி, இனாம்குளத்தூர், ஆலம்பட்டி புதூர், மரவனூர், சத்திரப்பட்டி, நவலூர் குட்டப்பட்டு, ராம்ஜிநகர் மில்கேட், தீரன் நகர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்து விட்டு இறுதியாக திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட கருமண்டபம் பகுதிக்கு வருகிறார். அங்கு மேற்கு தொகுதி வேட்பாளர் மரியம்பிச்சையை ஆதரித்து பேசிவிட்டு மீண்டும் திருச்சி சங்கம் ஓட்டலுக்கு திரும்புகிறார்.
மூன்றாம் நாள் பிரச்சாரமாக (26-ந்தேதி) சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஓட்டலில் இருந்து புறப்படும் ஜெயலலிதா, தனது ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட கம்பரம்பேட்டை, அல்லூர், ஜீயபுரம், திருப்பராய்த்துறை, காவல்காரன்பாளையம், பேட்டவாய்த்தலை, பெரியருப்nullர், கோப்பு, போசம்பட்டி, கீரிக்கல்மேடு, பள்ளக்காடு, அதவத்தூர், சோமரசம்பேட்டை, புங்கனூர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக ஜெயலலிதா வேன் மூலம் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க சிறப்புரையாற்றுகிறார். இரவு திருச்சியில் தங்குகிறார்.
27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்சியில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு பிரச்சாரம் செய்ய புறப்பட்டு செல்கிறார்.
இந்த 3 நாட்களும் ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தின்போது அ.தி.மு.க மற்றும் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளார்கள். அதாவது 150 கிலோமீட்டர் தூரத்திற்கு ஜெயலலிதாவிற்கு தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு அளிக்கப்படும். மொத்தத்தில் ஜெயலலிதாவை வரவேற்க ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு தொகுதி மக்களும், திருச்சி மேற்கு தொகுதி மக்களும் அ.தி.மு.க.வினரும், தோழமை கட்சிகளும் வரவேற்க தயாராகி விட்டார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.