எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, மார்ச். 22 - சங்கரன்கோயில் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி 68,757 ஓட்டுகள் அதிகம் பெற்று மிகப் பெரும் வெற்றியடைந்தார். தி.மு.க, தே.மு.தி.க. உள்ளிட்ட 12 பேரும் டெபாசிட் இழந்தனர். முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிர் சவால் விட்டு களமிறங்கிய தே.மு.தி.க. நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது. சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் முத்துச் செல்வி, தி.மு.க. சார்பில் ஜவஹர் சூரியகுமார், ம.தி.மு.க சார்பில் சதன் திருமலைக்குமார், தே.மு.தி.க. சார்பில் முத்துக்குமார், மற்றும் பா.ஜ.க, சுயேட்சை உள்பட 13 பேர் களத்தில் இருந்தனர். வேட்பாளர் அறிவிப்பில் இருந்து அனைத்திலும் முந்திக் கொண்டது அ.தி.மு.க. இந்த தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி துவக்கத்திலேயே முடிவு செய்யப்பட்டு விட்டது. அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வியை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா சங்கரன்கோயிலில் 10 இடங்களில் பிரச்சாரம் செய்தார். தி.மு.க ஆட்சியில் இருப்பது போன்ற உணர்வில் கருணாநிதியின் மகன் அழகிரி, தி.மு.க.வின் தேர்தல் பொறுப்பாளராக களமிறங்கினார். துவக்கத்தில் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார் என அழகிரி முதலில் பேசினார். தேர்தல் களத்தில் அ.தி.மு.க.வுக்கு மக்களின் ஆதரவை கண்ட அழகிரி, சில நாட்களிலேயே 10 முதல் 15 ஆயிரம் ஓட்டுகளில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார் என பேசினார். அதிலிருந்து அவரது தேர்தல் பணிகளும் அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லை.
தொண்டர்களையும், நிர்வாகிகளையும் மிரட்டினாரே தவிர, பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கவோ செல்லவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், தி.மு.க. முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மந்திரிகள், எம்.பிக்கள் என ஒரு மாபெரும் படை தி.மு.க. சார்பில் தேர்தல் பணியாற்றியது. அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க. வெற்றி பெற்று விட்டது என்ற தொணியில் அதிகார தோரணையில் பேசி வந்தனர். நாட்கள் செல்லச் செல்ல அ.தி.மு.க.விற்கு ஆதரவு பெருகியது. மேலும் ம.தி.மு.க.வின் தேர்தல் பணிகளும் தீவிரமாக இருந்தது. இதைக் கண்ட தி.மு.க. எங்கே 3 வது இடத்திற்கு சென்று விடுவோமோ என்ற பயத்தில் தங்களது கட்சி ஓட்டுகளையாவது பெற வேண்டுமே என்ற எண்ணத்தில் தேர்தல் பணியாற்றினர்.
வைகோவின் சொந்த தொகுதியான சங்கரன்கோயிலில் எப்படியும் 2 வது இடத்தையாவது பிடித்து விட வேண்டும் என ம.தி.மு.க.வினர் கடுமையாக உழைத்தனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என்ற பாணியில் விஜயகாந்தின் தேர்தல் பிரச்சாரமும் அமைந்தது. ஆனால் அ.தி.மு.க. வேட்பாளரோ எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அமைதியாக வீடு வீடாக சென்று தனக்கு இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் வேண்டிக் கொண்டார். இந்த இடைத் தேர்தலில் சங்கரன்கோயில் தொகுதி மக்கள் அ.தி.மு.க.வுக்கு இந்த தொகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளனர். சங்கரன்கோயில் தொகுதியை பொறுத்தவரை 2 லட்சத்து 5 ஆயிரத்து 840 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 045 பெண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 795 பெண் வாக்காளர்களில் மொத்தம் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 756 வாக்காளர்கள் கடந்த 18 ம் தேதி வாக்களித்திருந்தனர். இது 78 சதவீதமாகும்.
ஓட்டுப் பெட்டிகள் புளியங்குடி ராமசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் வைத்து மூன்றடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. 18 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. அனைத்து சுற்றுகளிலும் அ.தி.மு.க வேட்பாளர் மிகப் பெரிய ஓட்டு வித்தியாசத்தை கடந்தார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மொத்தம் 13 பேர் போட்டியிட்டனர். நேற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் இறுதிசுற்றில் அவர்கள் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு:
1. எஸ்.முத்துசெல்வி அ.தி.மு.க. 94977
2. ஜவகர் சூரியகுமார் தி.மு.க. 26220
3. சதன் திருமலைக்குமார் ம.தி.மு.க. 20678
4. முத்துகுமார் தே.மு.தி.க. 12144
5. முருகன் பா.ஜ.க. 1633
6. நாகேஸ்வர் ராவ் சமாஜ்வாடி 277
7. கணேசன் ஜ.ம.க. 355
8. அய்யனு சுயேட்சை 152
9. ஆறுமுகம் சுயேட்சை 220
10. உடையார் சுயேட்சை 300
11. சங்கர் சுயேட்சை 377
12. பெருமாள் சுயேட்சை 1324
13. வெள்ளத்துரை சுயேட்சை 1115
போட்டியிட்ட 13 பேரில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துசெல்வி 68757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். சங்கரன்கோயில் தொகுதி வாக்காளர்கள் மின்வெட்டுக்கான உண்மையான நிலையை உணர்ந்திருந்ததாலும், அ.தி.மு.க. அரசின் 9 மாத கால சாதனைகளை மனதில் கொண்டு வாக்களித்திருப்பது தெளிவாகி உள்ளது. எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி அபார வெற்றி கண்டிருப்பதன் மூலம் சங்கரன்கோயில் தொகுதி என்றென்றும் அ.தி.மு.க.வின் கோட்டைதான் என இந்த இடைத் தேர்தல் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது. மகத்தான வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்விக்கு தேர்தல் அலுவலர் செல்வராஜ் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். இதில் அமைச்சர் செந்தூர் பாண்டியன், கழக அமைப்பு செயலாளர் பி.எச். பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.