எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சங்கரன்கோயில், மார்ச், 22 - சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி அத்தொகுதி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வாய்ச்சவடால் பேசிய விஜயகாந்தின் தே.மு.தி.க. வை அத்தொகுதி மக்கள் படுபாதாளத்திற்கு தள்ளி விட்டனர். சங்கரன்கோயில் இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. ஆரம்பம் முதலே அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி முன்னணியில் இருந்தார். ஒவ்வொரு சுற்றுகளிலும் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை காட்டிலும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி வகித்தார். இறுதியாக அவர் தனக்கு அடுத்து வந்த தி.மு.க. வேட்பாளரை காட்டிலும் 68,757 வாக்குகள் கூடுதலாக பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி அமோக வெற்றி பெற்றார். இதில் இருந்து சங்கரன்கோயில் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை இந்த தேர்தல் மூலம் தெளிவுபடுத்தி உள்ளது.
இந்த தொகுதியில் இதுவரை நடந்த 14 பொதுத் தேர்தல்கள், ஒரு இடைத் தேர்தலையும் சேர்த்து 15 தேர்தல்களில் அ.தி.மு.க. 8 முறை வெற்றி பெற்று சாதனையை படைத்துள்ளது. அங்கு இடைத் தேர்தல் முடிவானதும் முதலில் அ.தி.மு.க வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணியும் துவக்கப்பட்டது. 2011 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்ததால் 28 எம்.எல்.ஏக்களை பெற்றதுடன் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் பெற்றார் விஜயகாந்த். இதற்கு முன்பு நடந்த அனைத்து தேர்தல்களிலும் அவரது கட்சி மிகப் பெரிய தோல்வியையே சந்தித்து வந்தது. 2006 தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்தால் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதுவரை தனி ஆளாக சட்டசபைக்குள் சென்று வந்த விஜயகாந்த், 2011 ல் அ.தி.மு.க.வின் தயவால் 28 எம்.எல்.ஏக்களுடன் பவனி வந்தார். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கேற்ப விஜயகாந்தின் குணம் மெல்ல மெல்ல வெளியில் தெரிந்தது. அவர் அ.தி.மு.க.வை மெதுவாக எதிர்க்க ஆரம்பித்தார். இந்நிலையில் சட்டமன்றத்தில் அவரது அநாகரீகமான செயலால் அனைத்து கட்சியினரும் அவர் மீது வெறுப்படைந்தனர். இதற்கிடையில் தே.மு.தி.க.வால்தான் அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது போன்றும், விஜயகாந்தால்தான் ஜெயலலிதா முதல்வரானார் என்பது போன்ற தொணியில் விஜயகாந்தின் நடவடிக்கைகள் மாறின. சட்டசபை நிகழ்ச்சிக்குப் பின்னர் சட்டசபையிலேயே முதல்வர் ஜெயலலிதா, சங்கரன்கோயில் இடைத் தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என சவால் விடுத்தார். அவரது சவாலை கண்டு மிரண்டு போன விஜயகாந்த், என்ன செய்வது என்று அறியாமல் 2 நாட்களுக்கு பின்னர் முதல்வருக்கு எதிர் சவால் விடுத்தார். சங்கரன்கோயில் தொகுதியில் தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி அவர் வேட்பாளரையும் அறிவித்தார். மைத்துனர் சுதீஷை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தார். இவர் ஒருபுறமும், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஒருபுறமும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரச்சாரத்தின் போது விஜயகாந்தின் கண்ணியமற்ற பேச்சால் பலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மின் வெட்டு பிரச்சினைக்கு முதல்வர் ஜெயலலிதாதான் காரணம் என்றும், விலைவாசிகள் உயர்ந்து விட்டன என்றும், ஆளும் கட்சியின் செயல்பாடுகளை தட்டிக் கேட்க 29 தே.மு.தி.க. எம்.எல்.ஏக்களுடன் முத்துக்குமாரை 30 வது தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வாக அனுப்பினால் ஆளும் கட்சியின் தவறுகளை தட்டிக் கேட்பார் என்பது போன்ற வசனங்களை சினிமாவில் பேசுவது போன்று தேர்தல் பிரச்சாரத்தில் பொதுமக்கள் முன்பு விஜயகாந்த் பேசினார். மின்வெட்டு பிரச்சினைக்கு யார் காரணம் என்பதையும், தி.மு.க.வால் ஏற்பட்டுள்ள இந்த மின்தடைக்கு முதல்வர் ஜெயலலிதா விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார் என்பதையும் சங்கரன்கோயில் தொகுதி மக்கள் தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். சங்கரன்கோயிலில் தனக்கு எப்படியும் வெற்றி கிடைக்காது என்பதை அறிந்த விஜயகாந்த், எப்படியாவது 2 வது இடத்தை பிடித்து மக்களிடையே தனது கட்சிக்கு மிகுந்த ஆதரவு இருப்பதாக, அ.தி.மு.க.வுக்கு அறிவுறுத்த வேண்டும் என அவரது கட்சியினருக்கு உத்தரவிட்டு தேர்தல் பணியாற்றினார். 2006 சட்டமன்ற பொதுத் தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டு 5 ஆயிரம் ஓட்டுகளை மட்டுமே பெற முடிந்தது. அதன் பின் நடந்த பாராளுமன்ற தேர்தலில் சங்கரன்கோயில் தொகுதியில் மட்டும் சுமார் 11 ஆயிரம் வாக்குகளை பெற்றார். இதை கணக்கிட்டு இந்த தேர்தலில் மக்கள் தங்களுக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுப்பார்கள் என பகல் கனவு கண்டார் விஜயகாந்த். ஆனால் 2011 பொதுத் தேர்தலுக்கு முன்பு விஜயகாந்தின் செயல்பாடுகள், அதன் பின்னர் அவரது செயல்பாடுகள் அனைத்தையும் உணர்ந்திருந்த சங்கரன்கோயில் மக்கள் இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட காத்திருந்தனர். அக்கட்சியில் சமீபத்தில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள், கட்சியில் செல்வாக்கு இல்லாத நிலையில் தொண்டர்கள் அவர்கள் மீது வெறுப்பு கொண்டனர். மேலும் இவர்களால் பதவியிழந்த முன்னாள் நிர்வாகிகளும் வேட்பாளர் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். இது தவிர அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்ததால்தான் தே.மு.தி.க. மிகப் பெரும் வெற்றியை பெற்றது என்பதையும், வெற்றி பெற்ற பின்னர் ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்தவர் விஜயகாந்த் என்பதையும் அதன் பின் தனியாக போட்டியிட்டு தம்மால் சாதிக்க முடியும் என்ற அவரது மமதையையும், சங்கரன்கோயில் தொகுதி மக்கள் மிக தெளிவாக புரிந்து வைத்திருந்தனர். தேர்தல் பிரச்சாரத்தில் அ.தி.மு.க.வை குறை சொல்ல முடியாமல் திணறிய விஜயகாந்த், மின்வெட்டு பிரச்சினையை பெரிதாக பேசினார். அவரது பேச்சால் அப்பகுதி மக்கள் வெறுப்படைந்தனர். தேர்தலன்று பெரும்பாலான பூத்துகளில் தே.மு.தி.க.வின் பூத் ஏஜெண்டுகள் பூத்துக்குள் காணாமல் போயினர். இந்த தேர்தலில் சங்கரன்கோயில் தொகுதி மக்கள் தே.மு.தி.க. வேட்பாளருக்கு 4 வது இடம் கொடுத்து மிகப் பெரிய தோல்வியை ஏற்படுத்தியதுடன் தே.மு.தி.க.வை அதலபாதாளத்திற்குள் தள்ளி விட்டனர். 2 வது இடத்திற்கு வந்து விடுவோம் என்ற மமதையுடன் தேர்தல் களத்தை சுற்றி வந்த விஜயகாந்த், 3 வது இடம் பிடிக்க கூட தகுதியின்றி 4 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இது விஜயகாந்தின் ஆணவத்திற்கும் கர்வத்திற்கும் கிடைத்த பாடமாகும். வருங்காலங்களிலாவது அவர் நன்றியுடன் நடந்து கொள்வது நல்லது. இனிமேல் தே.மு.தி.க.வை யாரும் கூட்டணி சேர்க்க மாட்டார்கள் என்பதுதான் காலத்தின் கட்டாயமாகும். 2011 ல் அ.தி.மு.க.வுடன் சேரவில்லை என்றால் தே.மு.தி.க. காணாமல் போய் விடும் என்ற சூழ்நிலையை உணர்ந்து அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்தார் விஜயகாந்த். அன்றைய நிலையே இன்று தே.மு.தி.க.வுக்கு திரும்பி உள்ளது. இந்த பரிதாப நிலைக்கு விஜயகாந்தின் ஆணவமே முழுக்க முழுக்க காரணமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்