முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.வி. சேனல்களால் பத்திரிகைகளுக்கு பாதிப்பில்லை

வியாழக்கிழமை, 22 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மார்ச். 22 - இந்தியாவில் தற்போது செயல்பட்டு வரும் 800 டி.வி. சேனல்களால் பத்திரிகை துறைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய தகவல் ஒளிபரப்பு துறை செயலாளர் உதய் வர்மா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தொலைக்காட்சி, இணையதளம் போன்ற மின்னணு ஊடகங்களால் பத்திரிகைகளுக்கான வரவேற்பு குறையவில்லை. பாமர மக்களிடையே பத்திரிகைகளின் சேவை தேவையாக உள்ளது. அந்த வகையில் மின்னணு ஊடகங்களின் வளர்ச்சி பத்திரிகை துறையை அதிகம் பாதிக்கவில்லை. ஆனால் மேலை நாடுகளில் மின்னணு ஊடக வளர்ச்சியின் காரணமாக பத்திரிகை துறை சரியத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் தற்போது 800 டி.வி சேனல்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் புதிதாக 200 சேனல்கள் வரவுள்ளன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்