முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி ஊழல்: தயாநிதியின் நிதி ஆவணங்கள் தாக்கல்

புதன்கிழமை, 21 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். - 21 - ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ரூ. 550 கோடி ஊழல் புகாரில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் நிதி ஆவணங்கள் மத்திய அமலாக்கப் பிரிவில் தாக்கல் செய்யப்பட்டன.  2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் புகார் குறித்து சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான மேக்சிஸ் - ஏர்செல் ஒப்பந்தத்தில் ரூ. 555 கோடி ஊழல் நடந்ததாக தொலைத் தொடர்பு துறை முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவருடைய சகோதரரும், சன் டி.வி. நிர்வாக இயக்குனருமான கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் இருவருக்கும் மத்திய அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி இருந்தது. அதன் பேரில் தயாநிதி மாறன் தொடர்புடைய பண பரிமாற்றம், முதலீடுகள் மற்றும் இதர வர்த்தகம் தொடர்புடைய நிதி ஆவணங்கள் டெல்லியில் மத்திய அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டன.  இதே போல் கலாநிதி மாறன் சார்பிலும் நிதி ஆவணங்கள் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தயாநிதி மாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் எழுந்தது.  இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து கடந்த ஆண்டில் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறன் விலகினார். இந்த குற்றச்சாட்டை தயாநிதி மாறன் மறுத்து வருகிறார். இந்த வழக்கில் தயாநிதி மாறனுடன் தொடர்புடைய மேலும் சிலருடைய வாக்குமூலங்களையும் அமலாக்கப் பிரிவு பதிவு செய்துள்ளது. சி.பி.ஐ.யும் இந்த முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்