எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.23 - தமிழகத்தல் அடுத்த 11 ஆண்டுகளில் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும், குடிசையில்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படுவதே, மாநில அரசின் இலக்கு என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். ரூ.15 லட்சம் கோடியில் தமிழகத்தில் 11 ஆண்டு காலத்தில் தனி நபர் வருமானத்தை 6 மடங்கு உயர்த்தி ஏற்றத் தாழ்வற்ற வறுமையற்ற, குடிசைகளற்ற தமிழகத்தை உருவாக்கும் தொலை நோகுத் திட்ட அறிக்கையை முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.
'தமிழ்நாடு தெலைநேக்கு திட்டம் 2023' என்ற ஆவணம் வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தல் உள்ள தாஜ் கேரமண்டல் என்ற ஓட்டலில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு தெலைநேக்கு திட்டம் 2023' என்ற தலைப்பிலான ஆவணத்தை முதல்வர் ஜெயலலிதா வெளியிட நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில், உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பான சாலைகள், உலகத்தரம் வாய்ந்த நகரங்கள், தங்குதடையற்ற மின்சாரம் ஆகியவற்றை கிடைக்கச் செய்வது தமது லட்சியம் என்றும் ஜெயலலிதா கூறினார். நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழகம் உயர்த்தப்படும் என்றார். அடுத்த 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா கூறினார்.
மேலும் அவர் பேசியதாவது:-
இந்த நிகழ்ச்சி தமிழக பொருளாதார வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த நாள். 2011ம் ஆண்டு நான் பதவியேற்ற போது தமிழகத்தை இந்திய மாநிலங்களிலேயே முதல் மாநிலமாக்குவேன் என்று உறுதி அளித்தேன்.
அமெரிக்கா குறித்து மார்ட்டின் லூதர் கிங்குக்கு பெரும் கனவு உண்டு. அதைப் போல சிறந்த தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு எனக்கும் உண்டு. வேலையில்லாத இளைஞர்கள் இல்லை, முற்றிலுமாக வறுமை ஒழிப்பு, கல்வி, குடிநீர், துப்புரவு ஆகியவற்றுடன் பாதுகாப்பு, வளம், அமைதி ஆகியவற்றை மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்பது எனது லட்சியமாகும். வரும் நூற்றாண்டில் தமிழகத்தை பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக முதல் மாநிலமாக திகழ வேண்டும் என்று நான் கனவு காண்கிறேன். இந்த கனவை நினைவுப்படுத்தும் வகையில் 2023 தொலைநோக்கு பார்வை திட்டம் அமைந்துள்ளது. தலைவர்கள் தாங்கள் காணும் கனவுகளை நனவாக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். எங்கு தொலைநோக்கு பார்வை இல்லையோ அங்கு நம்பிக்கைக்கு இடமில்லை.
இப்போது அளிக்கப்படும் தொலை நோக்கு பார்வை திட்டம் தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதுடன் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் கிடைக்கும் வகையில் அமையும். அனைத்து வகையிலும் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் முதல் முறையாக இத்தகைய தொலைநோக்கு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் இதனை செயல்படுத்த இருக்கிறோம். இன்னும் 11 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 11 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும். இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியை விட இது 20 சதவீதம் இது கூடுதலாக இருக்கும்.
இன்னும் 11 ஆண்டுகளில் மக்கள் தொகை 15 சதவீதம் அளவுக்கு உயரும் என்பதை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த திட்டத்தின் படி தனி நபர் வருமானம் 6 மடங்காக உயரும். தாய்லாந்து, மலேசியா மற்றும் சீனா ஆகிய ஆசிய நாடுகளில் 1989ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளில் 7 முதல் 10 சதவீத வளர்ச்சி தான் ஏற்பட்டுள்ளது. ஆசியாவில் சில நாடுகளும், இந்தியாவில் சில மாநிலங்களும் அதிகளவில் வளர்ச்சி விகிதத்தை அடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் 11 சதவீத வளர்ச்சியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 11 ஆண்டுகளில் தமிழகத்தில் தனிநபர் வருமானம் 6 மடங்கு, அதாவது ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் அல்லது 10 ஆயிரம் அமெரிக்க டாலர் அளவுக்கு உயரும். இது உலக நாடுகளில் உள்ள உயர், நடுத்தர வருவாய் பிரிவினருக்கு சமமாக இருக்கும். அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவான சுகாதாரத் திட்டங்கள் வழங்க வழிவகை செய்யப்படும். இந்த தொலைநோக்கு பார்வையின் மூலம் மாநிலம் முழுவதும் ஏற்றத் தாழ்வுகள் குறையும் அளவுக்கு நடவடிக்கைகள் அமையும். குறைந்த வருவாய் பிரிவினருக்கு கணிசமான ஆதாரங்களை அளிப்பதின் மூலம் வறுமையற்ற மாநிலமாக தமிழகம் மாறும்.
2023-ம் ஆண்டில் தமிழகத்தில் யாரும் பின்தங்கி இருக்கக்கூடிய நிலைமை இருக்காது. பொருளாதார சக்தியில் முதன்மை மாநிலமாக, அனைவருக்கும் குழாய் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிnullநீர் கிடைக்கும். திறந்த சாக்கடை திட்டம் முற்றிலுமாக நீக்கப்படும். குடிசைகளற்ற, குடிசைப் பகுதிகளற்ற நிலைமையை உருவாக்க ஏழை மக்கள் வாங்கும் சக்திக்கு ஏற்ப 25 லட்சம் வீடுகள் கட்டப்படும். உலகத்தரத்திற்கு ஈடாக உயர்நிலைக் கல்வியை கிடைக்கச் செய்வதுடன் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரிக்கப்படும். அனைத்து வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும், குடிசையில்லாத ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு தொழில், வர்த்தக நிறுவனமும் தங்கு தடையற்ற நிலையான மின்சாரத்தை பெறச் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய லட்சியமாகும். மாநிலத்தின் நீnullண்டகால மின் தேவையைக் கருத்தில் கொண்டு இன்னும் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்நுட்ப வல்லுனர்களின் தேவையை கருத்தில் கொண்டு இன்னும் 11 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். பல்வேறு துறைகளில் சிறப்பு வாய்ந்த 10 தொழில்நுட்ப மையங்களை அமைக்க வேண்டும். நவீன அறிவியல், விவசாய தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்தி விவசாய உற்பத்தியை கணிசமாக உயர்த்த வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
உலகத் தரம் வாய்ந்த 10 நகரங்கள் தமிழகத்தில் உருவாக்கப்படும். தற்போதுள்ள நகரங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதுடன் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக இந்த நகரங்கள் விளங்கும். இந்த திட்டங்களை நிறைவேற்ற கணிசமான நிதி தேவை. இவற்றை நிறைவேற்ற 15 லட்சம் கோடி ரூபாய் தேவை என்று மதிப்பிடப்படுகிறது. மாநில அரசு மட்டுமே இதற்கான நிதி ஆதாரத்தை திரட்ட முடியாது என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். தனியார் துறை அமைப்புகள், வங்கிகள், நேரிடை வெளிநாட்டு முதலீடு உள்ளிட்ட அரசு சாரா அமைப்புகள் மூலம் கணிசமான நிதியை திரட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தமிழக மக்கள் சார்பில் அடிப்படை கட்டமைப்பு வசதி சேவைகளை பெறுவதற்கு மாநில அரசு முக்கிய பங்காற்றும். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் தனியார் துறை பங்களிப்பை ஈர்ப்பதற்கு தமிழகம் முதலீடு செய்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்படும். இதன் மூலம் ஆசிய அளவில் 3 முதலீட்டு மையங்களில் தமிழகம் முன்னணி இடத்தைப் பிடிக்கும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
விழாவில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின்போது முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்திற்கும், இந்திய எண்ணெய் கழகத்திற்கும் இடையே திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காட்டுப்பள்ளியில் எல்.என்.ஜி. இறக்குமதி முனையம் அமைக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்திற்கும், இந்திய பொறியாளர் நிறுவனத்திற்கும் இடையில், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் மேம்பாட்டு முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கான உடன்படிக்கையும் செய்துக் கொள்ளப்பட்டது. விழாவில் ஏராளமான தொழில் முனைவோர் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.