முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் முழு வெற்றி

வியாழக்கிழமை, 22 மார்ச் 2012      இந்தியா
Image Unavailable

 

ஜெனிவா, மார்ச். 23 - ஐ.நா.வில் போர்க்குற்றவாளி நாடான இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம் இந்தியாவின் ஆதரவோடு வெற்றி பெற்றது. தமிழருக்கு எதிராக இலங்கை நடத்திய படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் சர்வதேச அளவில் கவன ஈர்ப்பை பெற்றிருந்தது. ஐ.நா.வில் நேற்று நடந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கையை எதிர்த்து 24 நாடுகளும், ஆதரவாக 15 நாடுகளும் வாக்களித்தன. இலங்கையை எதிர்த்த முக்கிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. 

இதைத் தொடர்ந்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக, விவாதத்தில் பங்கேற்று பேசிய கியூபா நாட்டு பிரதிநிதி இலங்கைக்கு பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளும் ஆயுதங்கள் வழங்கியுள்ளன. எனவே இதில் இலங்கையை குற்றவாளியாக்க கூடாது. மேலும் தீர்மானத்தை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் இதை மறுத்து உறுதியாக கூறி விட்டது அமெரிக்கா. தொடர்ந்து தீர்மானத்திற்கு எதிராக பேசிய ஈக்வடார், மனித உரிமை விஷயத்தில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது. ஈராக், ஆப்கனில் நடக்கும் மனித உரிமை குறித்து அமெரிக்கா மவுனம் சாதிப்பது ஏன் என்று கேட்டது. 

இந்த கருத்தை நைஜீரியா, உகாண்டா, தாய்லாந்து போன்ற நாடுகளும் பதிவு செய்து கொண்டன. சீனா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், மாலத்தீவு போன்ற நாடுகளும் இலங்கைக்கு ஆதரவளித்தன. குறிப்பாக, படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை என்று சீனா வாதாடியது. ஆனால் உருகுவே, பங்களாதேஷ், பெல்ஜியம் போன்ற பெரும்பாலான நாடுகள் அமெரிக்க தீர்மானத்தை உறுதியாக ஆதரித்தன. இலங்கையின் போர்க்குற்ற படுகொலைகளை எந்த நாகரீக சமூகமும் ஏற்க முடியாது என அவை சூடாக வாதாடின. 

இந்தியாவின் பிரதிநிதி பேசுகையில், இலங்கையில் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள் அறுதியிட்டு உறுதி செய்யப்பட வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களும் படுகொலைகளும் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று கூறி அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பதாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்