முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் பெண்ணைக் கட்டிப்போட்டு கொள்ளை

வியாழக்கிழமை, 24 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

கொடைக்கானல், மார்ச்.24 - கொடைக்கானலில் தொழிலதிபர் வீட்டில் பெண்ணைக் கட்டிப் போட்டு 50 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற கும்பலைப் போலீசார் தேடி வருகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செயிண்ட் மேரீஸ் சாலையில் வசித்து வருபவர் செல்வின் மகன் ராக்லாந்த் ஜெயராஜ்(48). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது தொழில் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவது வழக்கம். இவரது மனைவி இமாஞ்சலின்(46) ஹில்டாப் ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு இமாஞ்சலின் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது 4 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் உள்ளே புகுந்தனர். அதில் ஒருவர் மட்டும் முகமூடி அணிந்திருந்தார். 

அவர்கள் இமாஞ்சலினைக் கட்டிப்போட்டு பீரோவில் இருந்த 50 பவுன் நகைகளைக் கொள்ளையடித்து விட்டு வீட்டிலிருந்த மாருதி 800 காரையும் எடுத்துக் கொண்டு பழநி வழியாக தப்பிச் சென்றனர். கார் செல்லும் வழியில் பெட்ரோல் தீர்ந்து போகவே காரை பாதி வழியிலேயே விட்டு விட்டு ஓடி விட்டனர். இதுகுறித்து நேற்று இமாஞ்சலின் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மாவட்ட எஸ்.பி. சந்திரசேகரன், ஏ.டி.எஸ்.பி. சிவக்குமார், கொடைக்கானல் டி.எஸ்.பி. பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ஏ.டி.எஸ்.பி.சிவக்குமார் கூறுகையில், இந்த கொள்ளைக் கும்பலைப் பிடிக்க 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றுதெரிவித்தார்.

கொடைக்கானல் பகுதியில் நடந்த இந்தக் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்