எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை ,மார்ச் .24 - முதல்வர் ஜெயலலிதாவின் சீர்மிகு ஆட்சியில் காவல்துறை சீர்த்திருத்தங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. அவ்வகையில் சென்னை மாநகராட்சிக்கு 87 ரோந்து வாகனங்களை வாங்குவதற்கும், பல்வேறு பணிகளைக் கவனிக்க 119 புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் தஞ்சை மாவட்ட காவல் கணிகாணிப்பாளர் அலுவலகத்திற்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் காவலர் குடியிருப்புக்கும் புதிய கட்டடங்களைக் கட்டவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். காவல் துறை சீரமைப்பிற்காக புதிதாக ஆயிரம் கணினிகள் வாங்கவும், ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் நாற்காலிகள் போன்ற பொருட்கள் வாங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒரு நாடு வளம் பெறவேண்டும் என்றால் அந்த நாட்டில் அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும். அமைதியான சூழ்நிலையில் தான், அந்த நாட்டின் மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ முடியும். நாட்டின் அனைத்து துறைகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, நாட்டின் பொருளாதார நிலை வளமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையினை உருவாக்குவதில் காவல் துறை முக்கிய பங்கு வகிக்கின்றது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த காவல் துறையின் அதிநவீனமயமாக்கப்படுதலுக்காகவும், அந்த காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் நலன்களுக்காகவும், முதலமைச்சர் ஜெயலலிதா பல முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில், சென்னை மாநகரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காவலர்களின் கண்காணிப்பு பணி இடைவிடாது இருக்க அதிக அளவு ரோந்து வாகனங்கள் தேவை என்பதை கருத்தில் கொண்டு, 5 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் 87 ரோந்து வாகனங்களை வாங்குவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில், பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தல்; nullநீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை கண்காணித்தல்; குற்றவாளிகள் மீது வழக்கு தொடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்துறை தனது பணிகளை மேலும் செம்மையாக செயல்படுத்த இத்துறைக்கு கூடுதல் பணியாளர்கள் தேவை என்ற காவல்துறையின் கோரிக்கையினை ஏற்று, காவல்துறை ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப் பிரிவுக்கு கூடுதலாக 1 காவல் துறை துணை ஆணையர், 2 காவல் உதவி ஆணையர், 9 காவல் ஆய்வாளர், 46 காவல் உதவி ஆய்வாளர், 10 தலைமை காவலர், 20 முதல் நிலை காவலர், 30 இரண்டாம் நிலை காவலர், 1 சுருக்கெழுத்து தட்டச்சர் என மொத்தம் 119 புதிய பணியிடங்களை தோற்றுவிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் அரசுக்கு தொடர் செலவினமாக 5 கோடியே 32 லட்சத்து 83 ஆயிரத்து 769 ரூபாயும், தொடரா செலவினமாக 86 லட்சத்து 61 ஆயிரத்து 335 ரூபாயும், ஏற்படும்.
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தஞ்சாவூரில் ஒரு பழைய கட்டடத்தில் இயங்கி வருகிறது. இக் கட்டடம் தற்பொழுது மிகவும் பழுதடைந்துள்ளது. எனவே மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டியது மிகவும் இன்றியமையாதது என்பதைக் கருத்தில் கொண்டு, தஞ்சாவூரிலுள்ள தமிழ் பல்கலைக் கழகத்துக்கு அருகில் 4 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டடம் கட்டுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு மாதந்தோறும் நடைபெறும் கிரிவலம் மற்றும் வருடந்தோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா ஆகியவற்றிற்கு திரளாக பொதுமக்கள் வருகை தருகின்றனர். இச்சமயங்களில் மக்களின் பாதுகாப்பிற்காக வெளி மாவட்டங்களிலிருந்து காவலர்கள் வரவழைக்கப்படுகின்றனர். இவ் விழாக்காலங்களில் காவல் பணிகளை மேற்கொள்ளும் காவலர்கள் நலன் கருதி, 11 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில் 500 காவலர்கள் தங்குவதற்கான அளவில் காவலர் குடியிருப்புகள் கட்டுவதற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
காவல் துறையின் குற்றப்பிரிவு கீழ் இயங்கும் குற்றப் புலனாய்வுத் துறையில் அறிவியல் பிரிவு ஒன்றினைத் துவக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பிரிவில் அறிவியல் அதிகாரி மற்றும் அறிவியல் உதவியாளர் ஆகிய இரு பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இவர்கள், வழக்கின் முக்கியமான அம்சமான அறிவியல் சம்பந்தப்பட்ட குறிப்புகளை ஆராய்ந்து குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிக்கை அளிப்பார்கள். ஆயுதப்படை மற்றும் சிறப்புக் காவல்படையில் புதியதாக பணியமர்த்தப்பட்டுள்ள இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு, காவல்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் பணியாற்றக்கூடிய வகையில் நுட்பமான பயிற்சியை அளிக்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, இடையில் கால அளவு குறைக்கப்பட்ட பயிற்சியினை மீண்டும் முன்பு இருந்தது போல் காவலர் உயர்ரக பயிற்சி பள்ளியில் 7 மாதங்கள் பயிற்சி அளிப்பதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மக்களின் அன்றாட வாழ்வில் கணினி பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது. எனவே, காவல் துறைக்கு தேவைப்படும் விவரங்களான குற்றங்களின் எண்ணிக்கை, குற்றவாளிகளின் செயல்பாடுகள், குற்றவாளிகள் பற்றிய விவரங்களை பராமரித்தல் போன்ற அனைத்து நடவடிக்கைகளிலும் கணினி செயல்பாடு பெரும் பங்கு வகிக்கின்றது. எனவே காவல்துறையின் பணி சிறக்க, காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு 245 கணினிகள், மாவட்ட தலைமை காவல் அலுவலகங்களுக்கு 330 கணினிகள், சரக அலுவலகங்களுக்கு 60 கணினிகள், மண்டல அலுவலகங்களுக்கு 16 கணினிகள், மாநகர காவல் அலுவலகங்களுக்கு 70 கணினிகள், ஆயுதப்படை தலைமை அலுவலகங்களுக்கு 5 கணினிகள், ஆயுதப்படை சரக அலுவலகங்களுக்கு 10 கணினிகள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு 64 கணினிகள், காவல்துறை சிறப்பு பிரிவுகளுக்கு 100 கணினிகள், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு 100 கணினிகள், என மொத்தம் 5 கோடி ரூபாய் செலவில் 1000 கணினிகள் வாங்குவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
காவல் நிலைய அன்றாடப் பணிகள் அனைத்தும் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவைகள் ஆகும். அன்றாடம் காவல் நிலையங்களின் உதவியை நாடி வரும் பொதுமக்களை வரவேற்று அமர வைக்க பெரும்பாலான காவல் நிலையங்களில் நாற்காலிகள் கூட இருப்பதில்லை. இதனால் பொதுமக்கள் வெகுநேரம் நின்று கொண்டே தங்கள் குறைகளை தெரிவிக்கின்ற நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, இந்தியாவிலேயே முன் மாதிரியாக தமிழகத்திலுள்ள
1492 காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் அமர்வதற்காக காவல் நிலையம் ஒன்றுக்கு 10 நாற்காலிகள் வீதம் வாங்குவதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். இந்த வகையில் அரசுக்கு 92 லட்சத்து 20 ஆயிரத்து 560 ரூபாய் செலவினம் ஏற்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.