முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை காலிறுதியில் இந்தியா அபார வெற்றி

வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

அகமதாபாத், மார்ச். 25 -  உலகக் கோப்பையில் அகமதாபாத்தில் நடைபெற்ற 2 -வது காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பிய ன் ஆஸ்திரேலியாவை வென்று அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2 -வது காலிறுதி ஆட்டம் குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் அரங்கத்தில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலி ல் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணி சார்பில் ஷேன் வாட்சன் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஹாடின் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்து வீச் சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் அந்த அணி நிர்ணயி க்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 260 ரன்னை எடுத்தது. 

ஆஸ்திரேலிய அணி தரப்பில்கேப்டன் ரிக்கி பாண்டிங் பொறுப்புடன் ஆடி சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவர் 118 பந்தில் 104 ரன்னை எடுத்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் அஸ்வின் வீசிய சுழற் பந்தில் சிக்கி ஜாஹிர்கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அடுத்தபடியாக கீப்பர் ஹாடின் 62 பந்தில் 53 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் யுவராஜ் பந்தி ல் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். தவிர, வாட்ச ன் 38 பந்தில் 25 ரன்னையும், டி. ஹஸ்சே 26 பந்தில் 38 ரன்னையும் எடு த்தனர். 

இந்திய அணி சார்பில் ஜாஹிர்கான் 53 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். அஸ்வின் 52 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவி ர, யுவராஜ் சிங் 44 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் சாய்த்தார். 

இந்திய அணி 261 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை ஆஸ்திரேலிய அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 47.4 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 261 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தப் போட்டியி ல் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரை இறுதிக்குள் நுழைந்தது. 

இந்திய அணி தரப்பில், டெண்டுல்கர் 68 பந்தில் 53 ரன் எடுத்தார். இதி ல் 7 பவுண்டரிஅடக்கம். இறுதியில் அவர் டெய்ட் வீசிய பந்தில் ஹாடி னிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். டெண்டுல்கர் இந் தப் போட்டியின் மூலம் 18,000 ரன்னைக் கடந்து சாதனை படைத்தார்.

காம்பீர் 53 பந்தில் 50 ரன்னை எடுத்தார். இதில் 2 பவுண்டரி அடக்கம். கோக்லி 33 பந்தில் 24 ரன்னை எடுத்தார். இதில் ஒரு பவுண்டரி அடக் கம். தவிர, யுவராஜ் சிங் 57 ரன்னும், ரெய்னா 34 ரன்னும் எடுத்தனர். 

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அம்பானி குரூப் தலைவர் அனில் அம்பானி ஆகியோர் வி.ஐ.பி. காலரியில் இருந்து ஆட்டத்தை ரசித்துப் பார்த்தனர். 

இந்திய அணி அடுத்ததாக அரை இறுதியில் பாகிஸ்தான் அணியுடன் மோத இருக்கிறது. இந்த ஆட்டம் மொகாலியில் வரும் புதன் கிழமை நடக்கிறது. பாக். அணி காலிறுதியில் மே.இ.தீவு அணியை தோற்கடி த்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago