எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.24 - கேரள சுற்றுலா துறையில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாட்டுப்பயணிகளின் வருகை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கேரள சுற்றுலாதுறையின் வருவாய் கடந்த ஆண்டை விட ரூபாய் 2000 கோடி அதிகரித்துள்ளது. சென்னையில் கேரள சுற்றுலாத்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன இந்த விழாவில் அளிக்கப்பட்ட விபரங்கள் வருமாறு:- கேரள மாநிலத்திற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 7.5 லட்சமாக அதிகரித்துள்ளது. முந்தைய 2010 ஆண்டில் இது 6.5 லட்சமாக இருந்தது முந்தைய ஆண்டில் 85.95 லட்சமாக இருந்த உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வரத்து இந்த ஆண்டு 93 லட்சமாக அதிகரித்துள்ளது. 2010 ம் ஆண்டில் ரூ.3797.37 கோடியாக இருந்த அன்னியச் செலாவணி வருவாயும் ரூ.4221 கோடியாக உயர்ந்துள்ளது. இதே போல் சுற்றுலாவின் மூலம் கிடைக்கும் நேரடி மற்றும் மறைமுக வருவாய் முந்தைய ஆண்டில் இருந்த ரூ.17348 கோடியிலிருந்து ரூ.19037 கோடியாக அதிகரித்துள்ளது.
சுற்றுலாவின் அனைத்தும் அம்சங்களுடனும் உலக வரைபடத்தில் தனக்கென ஒரு இடத்தை கேரள மாநிலம் கடந்த ஆண்டில் உருவாக்கிக் கொண்டது. இது இந்த ஆண்டிலும் தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்று வருகிறது டிஜிட்டல் புரட்சியின் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கேரளா தன்னை ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் சிறப்பாக முன்னிலைப்படுத்திக் கொண்டுள்ளது.சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சொத்து உரிமையாளர்கள், பயண முகமைகள் மற்றும் கூகுல் போன்ற தேடியந்திரங்கள் மற்றும் வைஃபை, மொபைல் இன்டெர்னெட் போன்றவற்றின் இணைப்பும் கேரளாவின் மீது வெளிநாடுகளில் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா டூரிசம் மேற்கொண்ட இன்னொரு யுக்திசார்ந்த முயற்சியாக லண்டனில் அதிக மக்கள் கூடும் காட்சி கேலரியில் யுவர் மொமெண்ட் இஸ் வெய்ட்டிங் என்ற வீடியோ விளம்பரம் அறிமுகப்படுத்தப்பட்டது. யூட்யூப் தளத்திலும் இதர ஊடகங்களில் இந்த வீடியோ பெற்றிருக்கும் பெரும்புகழ் இந்த முயற்சிக்கு கிடைத்திருக்கும் பெரும் வெற்றியைக்குறிப்பாக அமைந்துள்ளது. ஏழாம் ஆண்டு கேரளா டிராவல் மார்ட், கேடிஎம் 2012 என்ற கண்காட்சி, செப்டம்பர் 27, 2012 முதல் செப்டம்பர் 30,2012 வரை கொச்சியில் உள்ள லி மெரிடியன் இன்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்டரில் நடத்தப்படுகிறது கேரளாவில் சுற்றுலா திட்டங்கள் மற்றும் சேவைகளை அளிக்கும் அனைத்தும் வர்த்தகர்கள் மற்றும் தொழில் முனைவோரை ஒன்றாகக் கொண்டு வருவதற்கான ஒரே சுற்றுலா தொடர்பான நிகழ்வாக இது திகழ்கிறது. வாங்குவோர் விற்போர் ஊடகம் அரசு முகமைகள் மற்றும் இதர தரப்பினரை ஒரே இடத்தில் சந்திக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட ஒரே நிகழ்வாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது. விசாகப்பட்டினம், புவனேஸ்வர், லக்னோ, குவாலியர், மைசூர், கோயம்புத்தூர், வதோதரா, புனே, ராய்ப்nullர் மற்றும் இன்தூர் ஆகிய இடங்களில் வெற்றிகரமான பங்குதாரர் சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் உற்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக முதல் அடுக்கு நகரங்களான சென்னை, பெங்களூர், தில்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், அகமதாபாத், சண்டிகர், நாக்nullர், கோவா, மைசூர் உள்ளிட்ட நகரங்களில் இத்தகைய சந்திப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளன. இதுவரை நடத்தப்படாத புதிய நகரங்களிலும் இத்தகைய சந்திப்புகளை நடத்த கேரளா டூரிசம் திட்டமிட்டுள்ளது. அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்பர்ன், நார்வேயில் ஆஸ்லோ, டென்மார்க்கில் கோபன்ஹேகன், ஃபின்லாந்தில் ஹெல்சின்கி, ஸ்வீடனில் ஸ்டாக்ஹோம், ஃபிரான்ஸ்சில் மெர்சிலி, ஜெர்மனியில் பெர்லின் ஆகிய இடங்களில் பயிலரங்கங்களை நடத்தியுள்ளது. பாரிசில் நடைப்பெற்ற டாப்ரெசா லண்டனில் நடைபெற்ற டபிள்யுடிஎம் ஸ்பெயிலின் நடத்த ஃபிடுர் சர்வதேச கண்காட்சியில் ஆகியவற்றில் பங்கேற்றதுடன் பெர்லினில் நடைபெறும் ஐடிபி மற்றும் ஸ்வீடனில் கோதென்பர்க்கில் நடைபெறும் டியூர் ஆகிய சர்வதேச கண்காட்சியில் பங்கேற்க உள்ளது.
கேரளாவில் நடைபெற்ற கிராண்ட் கேரளா ஷாப்பிங் ஃபெஸ்டிவல் திருவிழா, கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் தொடர்ந்து ஐந்து முறை பெரும் வெற்றி பெற்றுள்ளது. கேரள அரசு மேற்கொண்ட இந்த முயற்சி கடந்த 2007 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இது பெரும் எதிர்ப்பார்ப்பை ஆண்டுதோறும் ஏற்படுத்தும் நிகழ்வாக மாறியிருக்கிறது. கேரளாவின் தொழில் மற்றும் வர்த்தக துறை நிதி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் ஆகியவற்றின் ஆதரவுடன் கேரளாவின் சுற்றுலாத்துறை நடத்தும் இந்த நிகழ்ச்சி , கேரளாவை சர்வதேச ஷாப்பிங் தொகுப்பாக மாற்றுவதில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. புதிய நிறுவனங்கள் ஆச்சரியமூட்டும் சலுகைகள் மற்றும் பரிசுகள் ஆகியவை இந்த ஷாப்பிங் திருவிழாவை பெரும் வெற்றி பெறச் செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
பிரசாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு: நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
17 Apr 2024வேலூர் : பிரச்சாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க வெற்றி பெறாது : ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
17 Apr 2024காசியாபாத் : மக்களவை தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க.விற்கு வெற்றி கிடைக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளம் : ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது
17 Apr 2024புது டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த பணிகளை முன்னிலைப்படுத்தும் விதமாக உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சி நேற்ற
-
வெற்றி பெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் : அசாமில் பிரதமர் மோடி பிரசாரம்
17 Apr 2024கவுகாத்தி : 2014ம் ஆண்டு எதிர்பார்ப்புடன் மக்களை சந்திக்க வந்தேன், தற்போது வெற்றிபெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
60 ஆண்டுகளில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் : அசாமில் பிரதமர் மோடி பெருமிதம்
17 Apr 2024அசாம் : காங்கிரஸ் கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உழைத்தேன்.