எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச். 24 - சிக்கிம் பாராளுமன்ற உறுப்பினர் ராய் தலைமையிலான அதிகாரிகள் குழு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனை சந்தித்து தமிழக அரசு உயர்கல்விக்கு அளித்து வரும் முன்னுரிமை குறித்து ஆலோசனை நடத்தியது. சிக்கிம் பாராளுமன்ற உறுப்பினர் ராய் தலைமையிலான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக்குழு 23.03.2012 அன்று காலை 11.00 மணியளவில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் மற்றும் உயர்கல்வித்துறை கூடுதல் முதன்மைச் செயலர் முனைவர் ஸ்ரீதர் ஆகியோரை சந்தித்தனர். குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை உயர்கல்வித்துறை அமைச்சர் வரவேற்று உரை நிகழ்த்தினார். அவ்வுரையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அரசு உயர்கல்விக்கு அளித்துவரும் முன்னுரிமை குறித்தும், கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு எடுத்துவரும் நிலைகள் குறித்தும், கட்டமைப்பு வசதிகளை உயர்த்துவது குறித்தும் எடுத்துக் கூறினார். உயர்கல்வித்துறையை ஆற்றல்சார் மையமாக உருவாக்க முதல்வர் எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.
தமிழக மாணவர்கள் கணினியின் வழி உலக அறிவு பெற வேண்டும் என்ற அடிப்படையில், சுமார் 10 இலட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கி வருவது குறித்தும், அதன் செயல்முறை குறித்தும் விளக்கினார். இறுதியாக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி, உயர்கல்வியின் வளர்ச்சிக்கு எடுத்துவரும் அனைத்து வழிவகைகளையும் எடுத்துக் கூறி குழு உறுப்பினர்களை வரவேற்றார். தமிழகத்தில் உயர்கல்வியை வளர்க்க செயல்பட்டுவரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், நடைமுறைகள் குறித்தும் விளக்கமாக அறிந்துகொள்வதற்காக இக்குழு இங்கு வந்துள்ளது. அதுபற்றி எடுத்துக்கூறினால் அதை அம்மாநிலத்தில் எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து முடிவெடுக்க ஏதுவாக இருக்கும் என்று குழுவின் தலைவர் ராய், கேட்டுக் கொண்டார்.
உயர்கல்வித்துறை கூடுதல் முதன்மைச் செயலர் முனைவர் ஸ்ரீதர் உரையாற்றுகையில், தமிழகம் உயர்கல்வியில் அடைந்துள்ள வளர்ச்சி குறித்தும், கல்வியின் தரம் குறித்தும், ஆற்றல்சார் மையமாக உயர்கல்வி வளர்ந்துவருவது குறித்தும் கூறினார். உயர்மட்டக் குழுவிற்கு தேவையான அனைத்து விவரங்களையும் புள்ளி விவரங்களுடன் எடுத்துக் கூறினார். வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் ஜி.இ.ஆர். விகிதத்தை 25 விழுக்காடாக உயர்த்துவதற்கு எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் எடுத்துக் கூறினார். தமிழக முதல்வர் வெளியிட்ட விஷன் 2023 -யில் கொள்கை விளக்கை குறிப்பேடு உயர்கல்விக்கு கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமை குறித்தும் விளக்கமாக எடுத்துக் கூறினார். தமிழகத்தில் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி வழங்கி வருவதையும் புள்ளி விவரங்களோடு கூறினார். வருடத்திற்கு ஒரு முறை தொழில்துறை சார்ந்தவர்களும் கல்வித்துறை சார்ந்தவர்களும் கூடி விவாதித்து உயர்கல்வியை வளர்க்கும் உத்திகளை வகுக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கருத்துக்களை குழு முன் விளக்கி கூறினார்.
பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி குறித்தும், அதன் நடைமுறை பணிகள் குறித்தும், கல்வியின் தரத்தை உயர்த்த பல்கலைக்கழகங்கள் எடுத்துவரும் நிலைகள் குறித்தும் விளக்கி கூறினார். பல்கலைக்கழகங்களில் தொலைதூர கல்வி செயல்படுவது குறித்தும், சமூக கல்லூரி உருவாக்கி செயல்படும் விதம் குறித்தும், அதன்மூலம் மாணவர்கள் அடைந்துவரும் பலன் குறித்தும் கூறினார். தமிழக அரசும், பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் ஊக்குவிப்பதற்காகவும் பல்வேறு பல்கலைக்கழங்களோடு, பல்வேறு நாடுகளோடு செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும் கூறினார்.
தமிழக அரசின் முதன்மை நோக்கமான உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்க எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் கூறினார். பாடத்திட்ட முறைமையை வளர்க்க 10 பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ரூ.1 கோடி வழங்குவது குறித்தும், அறிவுசார் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ரூ.2 கோடி ஒதுக்கியிருப்பது குறித்தும், மொழி ஆய்வுக்கூடம் உருவாக்குவதற்காக ரூ.2 கோடி ஒதுக்கியுள்ளது குறித்தும் விளக்கமாக கூறினார்.
பள்ளிக் கல்வித் துறையும், கல்லூரிக் கல்வித்துறையும் இணைந்து எவ்வாறு கல்வியின் வளர்ச்சியில் பங்கு கொள்கிறது என்பதையும் கூறினார்.
அனைத்தையும் உன்னிப்பாக கேட்டறிந்த குழு உறுப்பினர்கள் சில ஐயப்பாடுகளையும் கேட்டறிந்து தெளிவுபெற்றனர்.
கடைசியாக குழுவின் தலைவர் ராய், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார். வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த குறிப்பாக சிக்கிமில் வாழும் மாணவர்கள் உயர்கல்வி பெற தமிழக அரசு சிறப்பு உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும், அதற்காக சிக்கிம் முதல்வரிடமிருந்து தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்புவதாகவும் அதை பரிசீலித்து தக்க உதவி வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக அரசு உயர்கல்வியில் எடுத்து வரும் முயற்சிகளையும், நடைமுறைப்படுத்திவரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்து பாராட்டினார். குறிப்பாக சுமார் பத்து இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை ஆச்சரியத்தோடும், வியப்போடும் கேட்டறிந்து பாராட்டினார். மேலும், தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சரையும் உயர்கல்வித்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களையும், தங்கள் மாநிலத்திற்கு வருகை புரிந்து உயர்கல்வியின் வளர்ச்சிக்கு ஆலோசனைகளை வழங்கி உதவி புரியவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இறுதியாக குழுவின் தலைவர் ராய் தமிழக முதல்வர் உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித் துறை கூடுதல் செயலர் ஆகியோருக்கும் சிக்கிம் அரசு சார்பாகவும் குழு சார்பாகவும் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.