எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.25 - 3 அரசு மறுவாழ்வு இல்லங்களை புதுப்பிக்க ரூ.5 கோடியே 21 லட்சத்து 82 ஆயிரம் ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாற்றுத் திறனாளிகளை சமுதாயத்தில் ஒரு அங்கமாக அனைவரும் ஏற்கவும், சமுதாய வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்பதற்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கும், அவர்களின் முழுபங்கேற்பை உறுதி செய்வதற்கும் உரிய பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
தற்போது 6 வயதுக்குட்பட்ட பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் முதல் கட்டமாக வேலூர், திருவண்ணாமலை, மதுரை, கிருஷ்ணகிரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இம்மையங்களில் சிறப்பு நிபுணர்களைக் கொண்டு தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த 5 பயிற்சி மையங்களை தொடர்ந்து நடத்திட 201112 ஆண்டிற்காக 22 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், மேலும் இதுபோன்ற பயிற்சி மையங்களை சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, திருச்சிராப்பள்ளி, ஈடு, கன்னியமாகுமரி, நாமக்கல், ராமநாதபுரம், கடலூர், தருமபுரி, காஞ்சிபுரம், கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், சேலம், சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய 20 மாவட்டங்களில் புதியதாக தோற்றுவிப்பதற்காக, மையம் ஒன்றுக்கு 1 லட்சத்து 71 ஆயிரத்து 500 ரூபாய் வீதம், 34 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், ஆக மொத்தம் பார்வையற்ற குழந்தைகள் நலனுக்காக 57 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அனுமதித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது மட்டுமல்லாமல், பார்வையற்ற குழந்தைகளை ஆரம்பநிலை பயிற்சி மையத்திற்கு அழைத்துவர மற்றும் திரும்ப அழைத்துச் செல்ல அக்குழந்தைகளின் பாதுகாவலர்களுக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் பயணச் செலவுத் தொகையினை 20 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தற்பொழுது இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மின்சார ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள், பணிபுரியும்/சுய தொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிக்கான பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கிடக் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதனை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த ஆண்டு 2 கோடி ரூபாய் செலவில் 400 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதில் மாவட்டங்களில் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு முன்னுரிமை அளித்து ஒதுக்கீடு செய்யப்படும். எஞ்சிய ஸ்கூட்டர்கள் பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும்.
செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியருக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் காதொலிக் கருவிகளுக்குப் பதிலாக 10,000 ரூபாய் மதிப்புள்ள அதிக திறன்வாய்ந்த காதுக்கு பின்பகுதியில் அணியும் காதொலிக் கருவிகள் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு 6 ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் 1,000 மாணவ, மாணவியருக்கு இந்த திறன் மிக்க காதொலிக் கருவிகள் வழங்கப்படும். இதற்காக அரசுக்கு 1 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
தமிழ்நாட்டில் தற்பொழுது 12 மாவட்டங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் கூடிய தொழிற்பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இத்திட்டத்தினை ஏனைய 20 மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் உணவு மற்றும் தங்கும் வசதியுடன் கூடிய தொழிற் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும். ஒரு மாவட்டத்திற்கு 75 மாற்றுத் திறனாளிகள் வீதம் 2400 மாற்றுத் திறனாளிகளுக்கு இப்பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக 74 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மாற்றுத் திறனாளிகள் தங்கள் வாழ்க்கைத் தரத்தினையும், பொருளாதார நிலைமையையும் மேம்படுத்துவதற்காக தொடங்கும் தொழில்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கிகள் முலம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை இந்த ஆண்டு 10 கோடி ரூபாய் வரை மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் தொகை வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் அதிகமான அளவில் முன்வந்து வங்கிகள் மூலம் கடன் பெற்று, சுயமாக தொழில் தொடங்கி வாழ்வில் முன்னேற்றம் அடைவதை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைக்காக வசூலிக்கப்படும் வட்டியினை முழுவதுமாக அரசே ஏற்றுக் கொள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தொழுநோயாளிகளை பராமரிக்கவும், அவர்களது நோயை குணப்படுத்தவும், அரசு 10 இடங்களில் மறு வாழ்வு இல்லங்களை அமைத்து பராமரித்து வருகிறது. இந்த இல்லங்கள் 38 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாலும், அவைகள் மோசமான நிலையில் இருப்பதாலும், அங்கு வசிக்கும் இல்லவாசிகள் மிகவும் சிரமமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். எனவே இந்த இல்லங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்தை, 1 கோடியே 61 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் செலவிலும் யா.புதுப்பட்டி அரசு மறுவாழ்வு இல்லத்தை, 1 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவிலும், புதுக்கோட்டை அரசு மறுவாழ்வு இல்லத்தை 1 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவிலும் ஆக மொத்தம் 5 கோடியே 21 லட்சத்து 82 ஆயிரம் செலவில் 3 அரசு மறு வாழ்வு இல்லங்களை புதுப்பிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேற்கூறிய அரசின் இந்நடவடிக்கைகள், மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் ஒரு நல்ல மறுமலர்ச்சியினை ஏற்படுத்தும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு