முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காட்டுயானை தாக்கி வாலிபர் பலி: முதல்வர் இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

tசென்னை, மார்ச்.25 - தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், ஏரிகொட்டாய் கிராமத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த வாலிபர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா ரூ.3 லட்சம் நிதி உதவியையும் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:- தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், கூத்தப்பாடி தரப்பு ராஜா ஏரி கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மாதன் 22.3.2012 அன்று காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

காட்டு யானை தாக்கியதில் அகால மரணமடைந்த மாதன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இத்துயரச் சம்பவத்தில் காலமான மாதனை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்திற்கு வனத் துறை மூலம் மூன்று லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்