முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெப்ஸி பிரச்சனைக்கு முதல்வர்ஆட்சியில் தீர்வு: ஜீ.சிவா

செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.27 - பெப்ஸி பிரச்சனைக்கு முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் முழுமையான தீர்வுக்கிடைக்கும் என்று பெப்ஸி ஜீ.சிவா கூறினார். இது பற்றிய விபரம் வருமாறு:- கடந்த சில மாதங்களாக திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் சினிமா தொழிலாளர்களுக்கும் இடையே ஊதிய பிரச்சனை நடந்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்தில் பல பிரச்சனைகள் எழுந்தன. பெப்ஸியை உடைத்து புது அமைப்பு உருவாக்கப் போவதாக தயாரிப்பாளர்கள் சிலர் கூறினார்கள். ஆனால் இந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் தொழிலாளர் நல ஆணையர் இரு அமைப்புகளையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்திருந்தார். இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திர சேகருக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் கலந்துக் கொள்ளவில்லை. அதனால் தயாரிப்பாளர் சங்க பொறுப்பாளர்களும் இப் பேச்சுவார்த்தையில் இடம் பெறவில்லை. ஆனால், பெப்ஸி அமைப்பினர் தொழிலாளர் நல ஆணையர் அழைப்பை ஏற்று நேரில் சென்றனர். அப்போது மனு ஒன்றை ஆணையரிடம் கொடுத்தனர். பின்னர் நிருபர்களிடம் பெப்ஸி ஜீ.சிவா கூறியதாவது:-

தொழிலாளர் பிரச்சனையை தீர்த்து வைக்க ஆணையம் முழு முயற்சி எடுத்து வருகிறது. அதற்கு உடன் பட்டு அழைக்கும் போது எல்லாம் பெப்ஸி வந்து கலந்துக் கொள்கிறது. இதில் எங்கள் தரப்பு நியாங்களை எடுத்துக் கூறியிருக்கிறோம். இப்பிரச்சனைக்கு முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் முழுமையான தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது பெப்ஸி தலைவர் ராமதுரை, இயக்குனர் ஜனநாதன், அமீர், கரு, பழனியப்பன், சந்திரன் என பலர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்