Idhayam Matrimony

ஸ்ரீவில்லி ஆண்டாள் திருக்கல்யாண விழா துவங்கியது

வியாழக்கிழமை, 29 மார்ச் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

ஸ்ரீவில்லி,மார்ச். 29 - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டனர். 5ம்தேதி ஆண்டாள் - ரெங்கமன்னார் திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.  ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் ஆண்டாளுக்கும் - ரெங்கமன்னாருக்கும் திருமணம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருக்கல்யாண திருவிழா நேற்று(26ந்தேதி) காலை தொடங்கியது.

நிகழ்ச்சியில் ஆண்டாள் - ரெங்கமன்னாருக்கு விசேச திருமஞ்சனம் சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு கோவில் சன்னிதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. 

அர்ச்சகர் கோவிந்தாசாரி, தானியம் ரமேஸ்பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

விழாவில் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து ஆண்டாளும் ரெங்கமன்னாரும் இரவு வேளைகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 5ம்தேதி இரவு நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்