முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சினுடன் கருத்து வேறுபாடில்லை: ராகுல் டிராவிட்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2012      விளையாட்டு
Image Unavailable

 

ஜெய்ப்பூர், ஏப். - 1 - சச்சினுடன் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. எங்களுக்குள் நல்லுறவு இருக்கிறது என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார்.  பி.சி.சி.ஐ. சார்பில் டிராவிட்டுக்கு மும்பையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சச்சின் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் டிராவிட் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் இது குறித்து கேட்கப்பட்டது. அதை முற்றிலும் மறுத்த டிராவிட், எங்களுக்கு இடையேயான நட்பில் எந்த விரிசலும் இல்லை. அவர் லண்டன் செல்வதற்கு முன்பாக என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சிகிச்சைக்காக லண்டன் செல்வதால் உங்கள் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை என்று தெரிவித்தார். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். யுவராஜ் குறித்து பேசிய டிராவிட், ஐ.பி.எல். போட்டியில் யுவராஜ் கலந்து கொள்ள மாட்டார். அவர் புற்று நோய் சிகிச்சை பெற்று வருவதால் அது இயலாத நிலையாக இருக்கிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டும். இப்போதைய நிலையில் அவருடைய உடல்நலம் தான் நமக்கு மிக பெரிய கவலை. அவர் முதலில் குணமடையட்டும். அவருக்காக கிரிக்கெட் காத்திருக்கும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்