முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மாரில் பூகம்பம் - 75 பேர் பலி

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

யாங்கூன், மார்ச்.26 -  மியான்மார் நாட்டில் நேற்று அதிக சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பம் ரிக்டர் அளவையில் 6.8 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நில நடுக்கம் 800 கி.மீ,க்கு அப்பால் உள்ள தாய்லாந்து தலைநகர் பாங்காக் வரை உணரப்பட்டதாக அந்த ஆய்வு மையம் தெரிவித்தது.

மியான்மாரில் இந்த நில நடுக்கத்தினால் குறைந்தபட்சம் 75 பேர் பலியாகி இருக்காலம் என்று மியான்மார் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

தொலை தூர பகுதிகளில் இருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

இடிபாடுகளில் சிக்கி 110 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் 240 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ராணுவ போலீசாரும் உள்ளூர் அரசு அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக மியான்மார் ராணுவ ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்