முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதலன் தந்தை பற்றி மிரட்டல் அல்போன்சா கமிஷனரிடம் புகார்

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.- 3 - என்னை கொலை செய்துவிட்டு, என் குழந்தையை கடத்தபோவதாக, இறந்த காதலன் வினோத்குமாரின் தந்தை மிரட்டுவதாக, நடிகை அல்போன்சா சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து விபரம் வருமாறு:- விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நடிகை அல்போன்சாவின் வீட்டில் அவரது காதலன் வினோத்குமார் கடந்த மார்ச் மாதம் .4ந் தேதி மர்மமான முறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வினோத்குமார் மரணம் குறித்து அவரது உறவினர்கள் சந்தேகத்தை கிளப்பினார் கள். அல்போன்சாதான் வினோத்குமாரை கொலை செய்துள்ளார் என்று பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார்கள்.இதனால் பயந்துபோன அல்போன்சா தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். தனியார்  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்துக் கொண்டார். வினோத்குமார் தற்கொலை வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக அல்போன்சா சென்னை உயர்நீதிமன்றத்தில்  முன்ஜாமீன் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடந்து கொண்டிருந்தபோது அல்போன்சா  முன்ஜாமீன் மனுவையும் வாபஸ் பெற்றார். வினோத்குமார் தற்கொலை சம்பவத்துக்கு பின்னர் அல்போன்சா பற்றி, பரபரப்பான செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அவர் ஐதராபாத்தில் பதுங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. வினோத்குமார் மரணம் குறித்து இதுநாள் வரை வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல் இருந்த நடிகை அல்போன்சா சென்னை எழும்nullரில் நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்தப்போது, நான் சினிமாவுக்கு வந்து 6 ஆண்டுகளுக்கு மேலாகிறது. வினோத்குமாரின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டன. அவரது சாவுக்கு நான் காரணம் இல்லை. நான் யாருக்கும் பயந்து எங்கும் ஓடி ஓளியவில்லை.

வினோத்குமாரின் குடும்பத்தினர், அவரிடம் ரூ.50 லட்சம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர். இதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை நான் சட்டப்படி சந்திப் பேன் என்று கூறினார். 

இந்நிலையில் நேற்று பிற்பகல் திடீரென்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அல்போன்சா வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

வினோத்குமார் தற்கொலை செய்த அன்று அவருடைய தந்தை பாண்டியன் மற்றும் உறவினர்கள் என்னை கடுமையாக அடித்து உதைத்தனர். என்னுடைய பாஸ்போர்ட்டையும் அவர்கள் எரித்து விட்டனர். இதனால் நான் மிகவும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன்.

வெளிநாடுகளில் நடைபெறும் படபிடிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. தற்போது பணம் கேட்டு மிரட்டும் பாண்டியன் என குழந்தையை கடத்திச் சென்று விடுவதாக கூறிகிறார். என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டிகிறார்.

அவதூறான வார்த்தைகளால் என்னை அவர் திட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

பிறகு அல்போன்சா நிருபர்களிடம் கூறியதாவது:-

காதலன் வினோத்குமாருடன் வாழ வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது. என் குழந்தைக்காக நான் வாழ விரும்புகிறேன். வினோத்குமார் தற்கொலை விவகாரத்தில் 3-வது நபர் ஒருவரின் தலையீடு உள்ளது. எனது  பாஸ்போர்ட்டை எரித்து  தொடர்பாகவும், மிரட்டல் விடுத்தது தொடர்பாகவும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்