முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6பேருக்குகருணை அடிப்படையில் வேலை நியமன ஆணை:கலெக்டர் சகாயம்வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.- 3 - மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கருணை அடிப்படையில் புதிதாக அனுமதிக்கப்பட்ட பணியிடத்தில் 6 நபர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கான பணி நியமன ஆணையையும், மாநில அளவில் ஆதிதிராவிட மாணவர்கள் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்றதற்காக உதவித்தொகையினையும்  மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் வழங்கினார்.  மேலூர் வட்டம் ஆலம்பட்டி கிராமத்தை சேர்ந்த தாய், தந்தை இழந்த 4 குழந்தைகளில் 3 நபர்கள் லட்சுமி, தரணி, மந்தைசாமி ஆகியவர்கள் வாய் பேச முடியாதவர்கள்.  சீத்தா என்ற பெண் மட்டும் வாய்க்கூடியவர்.  இவர்களை அவரது பெரியம்மா திருமதி.சாவித்திரி என்பவர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து கல்வி உதவித்தொகை கேட்டு மனு செய்தார்.  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உடனே பரிசீலனை செய்து மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலருக்கு உடனடியாக கல்வி உதவித் தொகை வழங்க உத்தரவிட்டார்.  அவர்களுக்கு புத்தகம், பேனா, பொன்னாடை போர்த்தியும் மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியிலிருந்து ரூ.1000 வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கெளரவித்தார்.ஆதி திராவிடர் மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் மாநிலத்தில் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு அரசு உதவித்தொகையாக மதுரை சி.இ.ஓ.ஏ பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர் திரு.சரவணக்குமார் என்பவருக்கு ரூ.30,000க்கான வரைவோலையும், ஹோலி பேமிலி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த செல்வி.மோனிஷா என்பவருக்கு ரூ.20,000க்கான வரைவோலையும், செயின்ட் மேரிஸ் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த திரு.ஜீவமுகேஷ் என்பவருக்கு ரூ.15,000க்கான வரைவோலையையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும் கருணை அடிப்படையில் 6 நபர்களுக்கு புதிதாக அனுமதிக்கப்பட்ட பணியிடத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கான நியமன ஆணையையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) ஆர்.ராஜாராம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அலிஅக்பர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பால்சுந்தர்ஜான் மற்றும் வருவாய்த்துறை, வளர்;ச்சித் துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

----------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago