முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியில் உள்ள காங். கூட்டணி ஆட்சியில் தினமும் ஊழல்வெளி வந்துகொண்டியிருக்கிறது

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஏப்.- 4 - மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தினமும் ஊழல் வெளிவந்துகொண்டியிருக்கிறது என்று பாரதிய ஜனதா தலைவர் நிதீன்கட்காரி கடுமையாக குற்றஞ்சாட்டி பேசியுள்ளார்.  டெல்லி மாநகராட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதனையொட்டி டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சி தலைவர் நிதீன்கட்காரி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின்போது மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசையும் டெல்லி காங்கிரஸ் அரசையும் கடுமையாக குற்றஞ்சாட்டி பேசினார். இந்த இரண்டு காங்கிரஸ் அரசுகள் ஆட்சியில் தினமும் ஊழல் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன என்றார். 2ஜி ஸ்பெக்ட்ரம் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்துவதில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று டெல்லியில் முதல்வர் ஷீலா தீட்சித் ஆட்சியில் ஊழல்கள் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டு கட்காரி பேசினார். டெல்லி காங்கிரஸ் அரசு ஊழலில் மூழ்கிக்கொண்டியிருக்கிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தியதில் பெருமளவு ஊழல்களும் முறைகேடுகளும் நடந்துள்ளன என்று பிரதமர் மன்மோகன் சிங் அமைத்த சுங்குலு குழு, காக், டெல்லி லோக் ஆயுக்தா ஆகிய விசாரணை அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. அந்த குற்றச்சாட்டுக்கு பின்னர் ஷீலா தீட்சித் ஆட்சியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை. இப்படி ஊழல் நிறைந்த கட்சிக்கு ஓட்டுப்போடாமல் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நிதீன்கட்காரி கேட்டுக்கொண்டார்.
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது அந்த மாநில லோக் ஆயுக்தா குற்றஞ்சாட்டியபோது அவர் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் டெல்லி மாநில அமைச்சர் ராஜ் குமார் சவுகான் மீது டெல்லி லோக் ஆயுக்தா குற்றஞ்சாட்டியபோது தீட்ஷித் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கட்காரி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்