முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணிக்கு வராவிட்டால் நிறுவனம் மூடப்படும்: விஜய் மல்லையா

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஏப். - 4 - பணிக்கு திரும்பாவிட்டால் விமான சேவைகள் இயக்குனரகத்தை அணுகி கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய கோரி விட்டு அதை மூடி விட்டு போய் விடுவேன் என்று அந்நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா ஊழியர்களை எச்சரித்துள்ளார்.  கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகள், பொறியாளர்கள் உட்பட அனைவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இதை கண்டித்தும், உடனே சம்பள பாக்கிய வழங்க கோரியும் அந்நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வரும் 10 ம் தேதிக்குள் ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்கப்படும் என்று மல்லையா தெரிவித்துள்ளார். இது தவிர ஊழியர்களுடன் தனது இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அதில் உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பணிக்கு திரும்பாவிட்டால் விமான நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து விட்டு அதை மூடி விடுவேன் என்று ஊழியர்களை எச்சரித்துள்ளார் மல்லையா.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்