எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.- 5 - இடுப்பு எலும்பு முறிந்த நிலையிலும் தன்னமிபிக்கை முறியாமல் ஆம்புலன்சில் வந்து 10-ம் வகுப்பு தேர்வை எழுதினார் சென்னையைச் சேர்ந்த தன்னம்பிக்கை மாணவர் ஒருவர். இது குறித்த விபரம் வருமாறு:- பள்ளி வாழ்க்கையில் 10ம் வகுப்பு தேர்வு என்பதுதான் மாணவர்களுக்கு மிகப்பெரிய திருப்பமுனை. இந்த தேர்வில் வாங்கும் மதிப்பெண்தான் உயர் கல்விக்கு அடித்தளமாக அமைகின்றன. எனவே 10ம் வகுப்பு தேர்வை எழுதுவதற்காக ஒரு வருடம் மாணவ மாணவிகள் சாப்பாட்டை மறந்து, தூக்கத்தை துறந்து கடுமையாக உழைத்து பரீட்சைக்கு தயாராகிறார்கள். இந்த நேரத்தில் சிறு தடங்கல் வந்தால் கூட அவர்களால் தாங்கி கொள்ள முடிவதில்லை. அதற்கு நேர்மாறாக தனக்கு வந்த தடையை தாண்டியுள்ள சென்னை நுங்கம்பாக்கம் மாணவர் அகிலன் தன்னம்பிக்கைக்கு ஒரு சாட்சி. நுங்கம்பாக்கம் ஜெயலட்சுமிபுரம் 3வது தெருவை சேர்ந்த அகிலன் ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்த அகிலனுக்கு கடந்த சனிக்கிழமை நேரம் சரியில்லை வீட்டு படியேறியபோது தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் அவருக்கு இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டது. உடனடியாக அண்ணாநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தனர். படுத்த படுக்கையாக இருந்த அகிலனுக்கு ஆபரேஷன் வலியை விட 10-வது தேர்வு எழுத முடியாதோ என்ற பயத்தின் வலி அதிகமாக இருந்தது. பெற்றோர், ஆசிரியர்கள் அனைவரும் ஆறுதல் கூறினார்கள். சீக்கிரம் குணமானதும் தேர்வு எழுதலாம். கவலைப்படாதே என்றனர். ஆனால் தேர்வு எழுதுவதில் அகிலன் விடாப்பிடியாக இருந்தார். வேறு வழியின்றி பெற்றோர் கல்வித்துறை அதிகாரிகள் உதவியை நாடினார்கள். அதிகாரிகளும் அகிலன் தேர்வு எழுத உரிய ஏற்பாடுகளை செய்தனர். நேற்று காலை 9.30 மணி அளவில் ஆம்புலன்சில் படுத்த படுக்கையாக நுங்கம்பாக்கம் மாநகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டார். ஆம்புலன்சில் இருந்து ஸ்டிரெச்சரில் தூக்கியபோது பெற்றோரும், உறவினர்களும் தவித்தனர். ஆனால் மாணவன் அகிலனுக்கு தேர்வு எழுத போகிறோம் என்ற நிம்மதி வலியை விரட்டி புன்னகையாய் முகத்தில் தெரிந்தது. அவர் தேர்வு எழுதுவதற்காக பள்ளியில் தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த அறையில் ஸ்டிரெச்சரில் படுத்த படுக்கையாக வைக்கப்பட்டார். அவருக்கு உதவ ஆசிரியை ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். வினாத்தாள் கையில் கொடுக்கப்பட்டதும் மாணவர் அகிலனுக்கு மகிழ்ச்சி. வினாக்களை படித்து பார்த்து விட்டு ஒவ்வொரு வினாக்களுக்கும் அவர் பதில் சொல்ல சொல்ல ஆசிரியை தேர்வை எழுதினார். தன்னம்பிக்க மாணவர் அகிலனின் பெற்றோர் ராகவசுவாமி கவிதா கூறியதாவது:
எங்கள் பிள்ளைக்கு அடிபட்டு இடுப்பில் ஆபரேசன் செய்ததும் நாங்கள் துடித்துப் போனோம். தேர்வை அடுத்த முறை எழுதலாம். உடல்நிலை சீராகட்டும் என்றுதான் நாங்கள் கடவுளை பிரார்த்தித்தோம். அவன் வகுப்பில் நன்றாக படிப்பான். மாதிரி தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் வாங்கினான். எனவே பரீட்சை எழுத முடியாமல் ஆகிவிடுமோ என்று வேதனைப்பட்டான். உன்னால் முடியும் என்றால் நாங்கள் அதிகாரிகளிடம் கேட்கிறோம் என்றோம். இன்று அவனது தன்னம்பிக்கைதான் அவனை தேர்வு எழுத வைத்துள்ளது.
அவனுக்காக அனுமதியளித்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு நன்றி கூறிக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தினமும் ஆம்புலன்ஸ் வாடகை ரூ.1500 கட்டணம். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தங்கள் பிள்ளையின் நம்பிக்கைக்கு துணை நின்ற மகிழ்ச்சியோடு மரத்தடியில் காத்திருந்தனர். தேர்வு முடிந்ததும் மீண்டும் ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அகிலன் குணமடைய இன்னும் சில வாரங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே அனைத்து தேர்வுகளுக்கும் ஆம்புலன்சில்தான் வரவேண்டிய சூழ்நிலை அவனுக்கு.
இதேபோல் ராகுல் என்ற மாணவருக்கு கணுக்காலில் அடிபட்டிருந்ததால் அவரையும் உறவினர்கள் தேர்வு அறைக்கு தூக்கி வந்தனர். பின்னர் அவர் அறையில் அமர்ந்து தேர்வு எழுதினார்.
இரு மாணவர்களின் தன்னம்பிக்கை மற்ற மாணவர்களுக்கு எடுத்து காட்டாகும்.
புட்நோட்
இடுப்பு எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு உட்கார கூடமுடியாத நிலையில் படுத்த படுக்கையில் ஆம்புலன்சில் 10-ம் வகுப்பு தேர்வெழுத வந்த சென்னை மாணவன் அகிலனை ஸ்டெச்சரில் தேர்வு மையத்துக்கு எடுத்துச் சென்ற போது எடுத்தப்படம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந
-
வல்லவன் வகுத்ததடா விமர்சனம்
22 Apr 2024நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான்” என்ற வாக்கியத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் விநாயக்