முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாணம் அழகர்கோவிலில் விமர்சையாக நடந்தது

வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மேலூர், ஏப். - 6 - மதுரை அழகர்கோவிலில் வீற்றிருக்கும் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாணசுந்தரவள்ளி தாயார், ஆண்டாள் ஆகிய பிராட்டிமார்களுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி கடந்த 2 ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நான்கு நாள் நிகழ்ச்சிகளிலும் மிகவும் முக்கியமான திருக்கல்யாண நிகழ்ச்சி பங்குனி மாதம் 23 ம் நாள் பகல் 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் மிதுன லக்னத்தில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று காலை 10.30 மணிக்கு மேல் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள், அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீகல்யாணவள்ளி தாயார், ஸ்ரீ ஆண்டாள் ஆகிய 5 பேரும் விசேஷ பல்லக்கில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மண்டபத்திற்கு வந்தனர். பின்னர் மகாயாகம் வளர்க்கப்பட்டு மந்திரங்கள் ஓதப்பட்டது. இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியை காண 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கல்யாண மண்டபத்தில் குழுமியிருந்தனர். மேளதாளம் முழங்க பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று நாமம் தரித்த போது திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்த பிறகு கோவில் நிர்வாகம் சார்பில் மஞ்சள் கயிறு, விபூதி, குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும்னிந்நிகழ்ச்சியில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் நடைபெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்