முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச பொருட்கள் கொடுப்பதாக அறிவிப்பது தேர்தல் விதிமீறல் அல்ல

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.26 - அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களுக்கு இலவச பொருட்களை கொடுப்பதாக அறிவிப்பது விதி மீறல் அல்ல, இது அந்தந்த கட்சியின் தேர்தல் திட்டமாகும். எனவே. இது தேர்தல் விதிமீறல் அல்ல என்று பிரவீன்குமார் கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் சி.டி. மற்றும் போஸ்டர்களை தமிழக  தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று வெளியிட்டார். அதை கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதா, ராஜேந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 

அந்த சி.டி.யில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜெயம்ரவி, இசை அமைப்பளார் விஜய் ஆண்டனி, நடிகைகள் சுகாசினி, ரோகிணி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆகியோர் ஓட்டு போடுவது ஜனநாயக கடமை என்று சொல்லும் வகையில் இந்த சி.டி. அமைந்துள்ளது.

இதேபோல் தேர்தல் கமிஷன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்களில் மக்களாட்சிக்கு வாக்களிப்போம், மனசாட்சிக்கு வாக்களிப்போம், உங்கள்வாக்கு, உங்கள் எதிர்காலம், nullநீங்கள் விரும்பும் மாற்றம் உங்களிடம் இருந்து தொடங்கும் விலை மதிப்புள்ள உங்கள் வாக்கை பணத்திற்காக விற்பது என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நிருபர் களிடம் கூறியதாவது:​ அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த சி.டி., போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகள், திரையரங்குகள், பொது இடங்களில் ஒளிபரப்படும்.  போஸ்டர்கள் முக்கிய இடங்களில் ஒட்டப்படும். 

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். தகுதி உள்ள அனைவரும் ஓட்டு போட வேண்டும். புகைப்படங்கள் அடங்கிய nullத் சிலிப், தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பே கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 51 ஆயிரம் வாக்குச் சாவடி ஊழியர்கள் இதை விநியோகம் செய்வார்கள். யாருக்காவது nullத் சிலிப் கிடைக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொல்லி பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சீபுரம், மதுரை ஆகிய இடங்களில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு வாக்காளர் பட்டியலில் புகைப்படம் இடம் பெறவில்லை. இவர்கள் ஏற்கனவே தேர்தல் கமிஷன் அனுமதித்த 13 விதமான புகைப்பட சான்றிழ்களில் ஏதாவது ஒன்றை வாக்குச்சாவடிக்கு கொண்டு வந்து ஓட்டு போட வேண்டும். மற்றவர்கள் புகைப்படத்துடன் கூடிய nullத் சிலிப்பை கொண்டே ஓட்டு போடலாம். கிராமங்களில் கிராம அதிகாரிகள் மூலம் nullத் சிலிப் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 48 ஆயிரத்து 356 புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 103 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகன சோதனையில் ரூ.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.7 கோடி மதிப்புள்ள பொருட்கள் திரும்ப கொடுக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக ரூ.3.8 கோடி பணம் பறிமுதல் ஆகி இருக்கிறது. சிறிய அளவிலான தொகை விசாரணைக்கு பிறகு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. பெரிய அளவிலான ரொக்கப்பணம் வருமானவரி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. சோதனை தொடர்பாக கோர்ட்டுக்கு தேர்தல் கமிஷன் 28​ந்தேதி விளக்கம் அளிக்கும். தற்போது தேர்தல் கமிஷனுக்கு வரும் புகார்கள் குறைந்து விட்டது. ஏப்ரல் 11​ந்தேதி முதல் 13​ந்தேதி வரை தேர்தல் கருத்து கணிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4​ந்தேதி முதல் மே 10​ந்தேதி வரை வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்பதை கேட்கும் கருத்துகணிப்பு வெளியிடக் கூடாது. 

அரசியல் கட்சிகள் இலவச பொருட்கள் கொடுப்பதாக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவற்றை வழங்குவதாக பிரச்சாரமும் செய்து வருகின்றனர். இது அந்தந்த கட்சிகளின் தேர்தல் திட்டம். எனவே இது தேர்தல் விதிமீறல் அல்ல. அது அந்த கட்சியின் வாக்குறுதி. எனவே இதை செய்வோம் என்று கூறி ஓட்டு கேட்கலாம். அரசு சார்பில் ஏதாவது செய்தால்தான் விதிமீறல் ஆகும். அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை செயல்படுத்த முடியுமா? என்பதை மக்கள்தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பிரச்சாரம் தொடர்பான செய்திகளை தொலைக்காட்சி, பத்திரிகைகள் வெளியிடலாம். விளம்பரங்களை தேர்தல் கமிஷன் அனுமதி பெற்றுதான் வெளியிட வேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது. இதுவரை 1,509 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

இவ்வாறு அவர் கூறினார். அதன்பிறகு அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி:​ சிலர் தனிப்பட்ட முறையில் மாற்று கட்சி தலைவர்களை விமர்சனம் செய்கிறார்களே? பதில்: இதுபற்றிய புகாரை 24 மணி நேரத்திற்குள் ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். 

கேள்வி:​ ம.தி.முக. பொதுச் செயலாளர் வைகோ தங்கள் கட்சியை தேர்தலில் நிற்க விடாமல் தடுக்க பெருமளவில் பணம் கைமாறி இருப்பதாக குற்றச்சாட்டு கூறி இருக்கிறாரே? 

பதில்:​ இதுகுறித்து எந்தப் புகாரும் தேர்தல் கமிஷனுக்கு வரவில்லை.

இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago