எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அருப்புக்கோட்டை ஏப்ரல் - 07 - அருப்புக்கோட்டையில் 4 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சட்ட அமைச்சர் சண்முகம் தலைமையில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வினோத் சர்மா திறந்து வைத்தார். அருப்புக்கோட்டையில் சார்பு நீதிமன்றம் பட்டாபிராமர் கோவில் தெருவிலும், முன்சீப் கோர்ட் பிள்ளைமார் தெருவிலும், குற்றவியல் நீதிமன்றம் பந்தல்குடி சாலை தாலுகா அலுவலக வளாகத்தில் தனி தனியாக செயல்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் செல்லும் போது அங்கும் இங்கும் அலைய வேண்டிய நிலை உள்ளது. நீதிபதிகளுக்கு குடியிருப்புகள் இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். அதை தொடர்ந்து அருப்புக்கோட்டை பொதுமக்கள். வழக்கறிஞர்கள். வர்த்தக அமைப்புகள் போன்ற பொதுநல அமைப்புகள் சார்பாக ஒருங்கிணைந்த நிதிமன்ற வளாகம் கட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் கீழ் அரசு உத்தரவின் படி மதுரை சாலை கால்நடை மருத்துவமனை அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட அரசு சுமார் 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மூன்று நீதிமன்றங்கள், மூன்று நீதிபதிகள் குடியிருப்புகள், கைதிகள் அறை, நூலகம், வங்கி, வழக்கறிஞர்கள் அறை, நீதிபதிகள், ஊனமுற்றோருக்கு தனித் தனியாக லிப்ட் வசதிகள் மற்றும் பல வசதிகளுடன் அதி நவீன ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டது. புதியதாக சுமார் 4 கோடி செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வினோத் சர்மா திறந்து வைத்தார். அதன் பின் திறப்பு விழா நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட எம்.எஸ்.மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு சட்ட அமைச்சர் சண்முகம் தலைமை வகித்தார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேவதாஸ், விஐயராகவன், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். விருதுநகர் மாவட்ட நீதிபதி கிருஷ்;ணமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வினோத் சர்மா திறந்து வைத்து பேசினார். விழாவில் சட்ட அமைச்சர் சண்முகம் பேசியதாவது தமிழக முதல்வர் அம்மா ஆட்சியில் ஒரு மாதத்தில் மூன்று நீதிமன்ற வளாகம் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த நீதிமன்ற கட்டிடம், கட்டிடப் பணிகள் நிதி பற்றாக்குறையால் தடைபட்டு இருந்தது. முதலமைச்சர் கூடுதல் நிதி ஒதுக்கி கட்ட உத்தரவிட்டுள்ளார். அதை தொடர்ந்து கூடுதல் நிதியால் நீதிமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஆட்சியல் நீதி துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும். சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். ஒரு விழாவில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் நீதி துறைக்கு நல்ல கட்டிடங்கள் அடிப்படை வசதிகள் நல்ல முறையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். பெரும்பான்மையான நீதிமன்ற கட்டிடங்கள் சொந்த கட்டிடங்களாகவே உள்ளது. நமது முதலமைச்சர் அவர்கள் நீதிதுறைக்கு தனி மரியாதை கொடுத்துள்ளார். நீதித் துறையில் அமைச்சர்கள், எம்.ஏல்.ஏ யாரும் தலையிடக் கூடாது என்று கூறியுள்ளார். முன்பு உயர்நீதிமன்றம் சென்னையில் மட்டும் தான் இருந்தது. கன்னியாகுமரி மற்றும் தென் மாநிலத்திலிருந்து உயர் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றால் சென்னைக்குத் தான் செல்ல வேண்டும். இதனால் பொதுமக்களுக்கு பண வரையம், கால வரையம் ஏற்பட்டது. கடந்த அம்மா ஆட்சியில் தென் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரையில் 88 கோடி செலவில் உயர்நீதி மன்ற கிளை துவங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 49 விரைவு நீதிமன்றங்கள் உள்ளன. இதை நிரந்தரமாக்கப்பட வேண்டும், நிரந்தர மாவட்ட நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதையும் உடனடியாக முதலமைச்சர் அவர்கள் 49 விரைவு நீதிமன்றங்கள் செயல்பட நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவிலேயே தமிழகம் தான் நீதி துறையில் முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. நில அபகரிப்புகளை விசாரிப்பதற்காக தனியாக நில அபகரிப்பு கோர்ட்டுகள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைத்து வருகிறது. 25 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சென்னை உயர்நீதி மன்றம் நீதிபதிகள் நீதிபதிகளை நியமிக்க வேண்டும். நீதித் துறையின் மூலம் எந்தெந்த கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதோ அதை அனைத்தையும் அம்மா அரசு நிறைவேற்றியுள்ளது. ஆவன காப்பகம் வேண்டுமென்று கூறியுள்ளதை ஏற்று அரசு ஆணை ஆவணக் கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். மேலும் நீதிமன்றம் மூலம் அனுப்பப்படும் கோரிக்கைகளை உடனடியாக முதல்வரிடம் எடுத்துச் சொல்லி நிறைவேற்றுவோம் என்றார்.
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விஜயராகவன், தேவதாஸ், கூடுதல் மாவட்ட நீதிபதி பரமராஜ், மாவட்ட ஆட்சியாளர் பாலாஜி, பார் கவுன்சிலர் உறுப்பினர் இராஜராஜன், அருப்புக்கோட்டை பார் கவுன்சிலர் தலைவர் செல்லையா, செயலாளர் செல்வராஜ் மற்றும் பலர் பேசினர். விருதுநகர் மாவட்டம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக நீதிபதிகளுக்கு சால்வை அணிவித்தனர். விழாவில் அருப்புக்கோட்டை சார்பு நீதிபதி ஜெசீந்திரா மார்டின,; குற்றவியல் நீதிபதி கணபதி சாமி, முன்சீப் நீதிபதி மகாலட்சுமி, விருதுநகர் சார்பு நீதிபதி லியாகத் அலிகான், குற்றவியல் நீதிபதி சசிரேகா, முன்சீப் நீதிபதி அமிர்தவேல், சாத்தூர் முன்சீப் நீதிபதி முத்துக்குமார், குற்றவியல் நீதிபதி சுபத்திரா, ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்ற நீதிபதி செல்லத்துறை, முன்சீப் நீதிபதி சந்திரன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மேகலா மைதிலி, சிவகாசி சார்பு நீதிபதி சுமதி, குற்றவியல் நீதிபதி சம்பத் குமார், முன்சீப் நீதிபதி ஜெயசுதா, இராஜபாளையம் குற்றவியல் நீதிபதி அனில்குமார், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ அருமைநாயகம் வரகுணராஜ், நாடார் உறவின் முறைத் தலைவர் மனோகரன், ஜெயவிலாஜ் தொழிலதிபர் தினகரன், பஸ் உரிமையாளர் மகாலிங்கம், மின்செயற் பொறியாளர்கள் பாலசுப்பிரமணியம், லதா, எஸ்.எஸ்.கே தொழிலதிபர் சங்கரலிங்கம் மற்றும் நீதிதுறையைச் சேர்ந்த அலுவலர்கள், வழக்கறிஞர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.