முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் நிதி நிறுவன தங்கம் கொள்ளை​ ஊழியரே சுருட்டியது அம்பலம்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.- 8 - வாடிக்கையாளர்களுக்கு தவணை முறையில் தங்கக் காசுகளை விற்பனை செய்ய  தமிழகத்தில் உள்ள கிளைகளுக்கு கெண்டு செல்ல  எழும்nullரில் இருந்து கோயம்பேட்டுக்கு ஆட்டோவில்  செல்லும் வழியில் ஆட்டோ டிரைவரும் அவரது உறவினரும் தங்களை வெட்டி விட்டு 2.5 கிலோ தங்கக் காசுகளைக் கொள்ளையடித்துச் சென்று விட்டனர்  என  காவல்துறையில் புகார் அளிக்கப் பட்டது.அதன்பேரில் தனிப் படைகளை அமைத்து விசாரணை செய்த காவல்துறையினர் தனியார் நிதி நிறுவன ஊழியர் செந்தில்குமாரே  தமது நண்பர்கள் உதவியுடன் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியதாக காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக இணை ஆணையர் சங்கர் அளித்த பேட்டியில் '' கோயம்பேட்டில் தனியார் நிதி நிறுவன தங்கக் காசுகள் கொள்ளை அடிக்கப் பட்ட புகார் குறித்து 7 தனிப் படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டோம். நிதி நிறுவன ஊழியர்கள் செந்தில்குமாரும், ராமநாதனும் அளித்த தகவல்கள் முரணாக இருந்ததால் செந்தில் குமாரின் செல்போனுக்கு யாரெல்லாம் தொடர்பு கொண்டார்கள் என விசாரணை செய்தோம். அதில் அப்பாத்துரை என்பவரிடம் செந்தில்குமார் அடிக்கடி பேசியது தெரிய வந்தது. அப்பாத்துரையைக் கைது செய்து விசாரித்தோம். அப்பாத்துரையை அடையாளம் காட்டிய ராமநாதன், அப்பாதுரை கொள்ளையர்களில் ஒருவன் எனத் தெரிவித்தார். மேலும் அப்பாதுரையின் ஆட்டோ தான் கொள்ளை ஆட்டோ என்றும் கூறினார். செந்தில் குமாரோ அப்பாத் துரை ஆட்டோ டிரைவர் இல்லை என்றும் கொள்ளை அடிக்கப் பயன்படுத்தப் பட்ட ஆட்டோ இது இல்லை என்றும் மறுத்தார். செந்தில் குமாரின்  நடவடிக்கைகளில் சந்தேகம் வரவே ராமநாதனையும், செந்தில் குமாரையும் தீவிரமாக விசாரிக்கவே செந்தில் குமார் தாம் தான் தங்கக் காசுகளைக் கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டான். அப்பாதுரை, அவரது உறவினர் ராஜூ ஆகியோரின் உதவியுடன் செந்தில் குமார் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளான். அடிக்கடி தங்கக் காசுகளை எடுத்துச் செல்லும் போது சுமார் 4 கிலோ அளவுக்கு  தாம் சுருட்டியது தெரியாமல் இருக்கவே செந்தில்குமார் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது'' என்று தெரிவித்தார். போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago